நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு தாய் மஞ்சுளா வழங்கிய ஆசிர்வாதம்..! வைரலாகும் புகைப்படம் இதோ..!!
நாளைய தினம் மூன்றாவது திருமண பந்தந்தில் இணைய இருப்பவர் நடிகை வனிதா. இரண்டு திருமணங்கள் செய்து இரண்டுமே நிலைக்காத நிலையில் லிவிங் டுகெதர் வாழ்ந்தார். அதுவும் நிலைக்காத நிலையில் நாளைய தினம் கிறிஸ்தவ முறைப்படி திருமண பந்தந்தில் இணைய இருக்கிறார்.
காரணம் பீட்டர் போல் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இதனால் இந்த திருமணம் பீட்டர் பாலின் விருப்பப் படியே நடக்க இருக்கிறதாம். இந்த நிலையில் நடிகை வனிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு டைமன்ட் மோதிரங்கள் உள்ளது.
கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்வதால் மோதிரம் மாற்றிக் கொள்ள தயாரான போது ஆர்டர் கொடுத்திருந்த மோதிரம் செய்ய லேட் ஆகும் என கூறியுள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த வனிதாவிற்கு அவரது தாயாரான மஞ்சுளாவின் தோழி குறித்த மோதிரங்கள் கிடைக்கும் படி செய்துள்ளார்.
இதனால் தனது தாயின் ஆசிர்வாதம் கிடைத்ததாக கூறியுள்ளார் நடிகை வனிதா. .!!