தாய், தந்தை இன்றி அக்கா ,மாமாவுடன் வசித்து வந்த 17 வயது மாணவி..! திடீரென தூக்கில் தொங்கிய கொடூரம்,!
தாய் தந்தை இல்லாத நிலையில் அக்கா மற்றும் அவரது கணவருடன் வாழ்ந்து வந்த 17 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவை சேர்ந்தவர் நீலம் குமாரி. இவரது தாய் தந்தை இறந்த நிலையில் சகோதரியான சுதா என்பவருடன் வாழ்ந்து வாழ்ந்துள்ளனர்.
நேற்றைய தினம் நள்ளிரவு வரை தொலைகாட்சியை பார்த்துக் கொண்டிருந்த நீலத்திடம் அவரது அக்கா உறங்கவில்லையா என கேட்ட போது உன்னுடன் தூங்குகிறேன் என கூறி அக்காவுடன் சென்று உறங்கியுள்ளார். பின் இங்கு உஷ்ணமாக இருக்கிறது என கூறிய நீலம் வேறு அறையில் சென்று தூங்கியுள்ளார்.
காலை நான்கு மணியளவில் எழுந்த அக்காவின் கணவர் ஆகாஷ் நீலம் உறங்கி அறை திறந்து இருந்ததால் ஏன் என்று கேட்க சென்றுள்ளார். அங்கு நீலம் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அவர் கத்தியதில் அனைவரும் ஓடி வந்த போது நீலம் சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். பொலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் ஆகாஷின் தொல்லையால் நீலம் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும் சரியான காரணம் என்ன என்பதை பொலீஸார் தேடி வருகின்றனர்..!!