நடிகர் கிங் காங்கின் அழகு மகள்களை பார்த்து இருக்கிறீர்களா.!? இதோ..!!
காமெடி நடிகர் கிங் காங் என்று எல்லோராலும் அழைக்கப் படுகின்ற சங்கர். இவரது வாழ்க்கையில் ஏற்பட்ட துயரங்களை தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார். ஏழை குடும்பத்தில் பிறந்த சங்கரால் ஐந்தாம் பகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாத போது படிப்பு க்கு எங்கே போவது.? படிப்பு ஐந்தோடு நின்று போக அப்பாவோடு காட்டுக்கு சென்று விறகு வெட்டி விற்று சாப்பிட்டு வந்தோம். என் உயரம் கூடவும் இல்லை குடும்ப கஷ்டம் தீரவும் இல்லை. கோயில் மேடை நாடகங்கள் வந்தால் மட்டுமே எங்கள் வீட்டில் வயிறு நிறைய சாப்பிடுவோம்.
மேடைகளில் என் நடிப்பை பார்த்து சிலர் சினிமாவில் முயற்சி செய்ய சொன்னார்கள். நானும் சினிமாவில் நடிக்க ஆசையோடு தேட தொடங்கினேன். ஆனால் என் உயரத்தை கேலி செய்து வெளியே விரட்டினார்கள், எங்கு திரும்பினாலும் கிண்டல் தான். என் உயரம் நானாக எடுத்துக் கொண்டது கிடையாது பின் நான் ஏன் கவலை பட வேண்டும்.? என் உயரத்தை வைத்து உயரம் தொட வேண்டும் என முயற்சி செய்துகொண்டே இருந்தேன்.
ஊரைத் தெரிஞ்சிகிட்டேன் படத்தில் வாய்ப்பு கிடைக்க இனி வெற்றி தான் என் வழி என முடிவு செய்து முயற்சி செய்தேன். கேலி கிண்டல்கள் செய்தவர்கள். என்னை பார்த்து சிரித்தவர்கள் சிரிக்கட்டும் என இன்னும் சிரிக்க வைத்தேன். நிஜத்தில் என்னுடன் சேராதவர்கள் திரையில் என்னை ரசிக்க 300 படங்கள் நடித்து விட்டேன் என கூறிய சங்கர். திருமணம் செய்துகொண்டேன்.
திருமண மேடையில் இருக்கும் போது கூட என் மனைவியிடம் கேட்டேன் என்னை பிடித்து தானே திருமணம் செய்கிறாய் என? அவரும் ஆமாம் என்றார். எனக்கு மூன்று பிள்ளைகள் மூத்தவ கீர்த்தனா +2 படிக்கிற. அவ ரொம்ப உயரம் என்னை போல இல்ல.
அடுத்து சக்திபிரியா, அடுத்து துரை முருகன். எல்லாருமே உயரமானவங்க தான். என் பிள்ளைகள நல்ல படிக்க வைப்பேன். திரை துறை பக்கம் அனுப்பவே மாட்டேன் என்கிறார் கண்களை துடைத்தபடி கிங் காங் சங்கர்..!