கார் ஓட்டுநருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டால் தானாக உதவி கோரும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகம் செய்த கூகுள் நிறுவனம்…!!!
உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்து வரும் கூகுள் நிறுவனமானது கார் ஓட்டுநர்களுக்கு உதவி கோரும் வகையில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது.
அதாவது கார் விபத்துக்கு ஏற்படும் போது தானாகவே பொலிசாரின் தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு உதவி கோராக்கூடிய வகையில் இத் தொழில்நுட்பம் காணப்படும்.
மேலும் இந்த தகவலை XDA Developers நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதற்கு இடையில் விசேட சென்சார் ஒன்று பயன்படுத்தப்படுவதுடன் அது வேகமுடுக்கி (accelerometer) மற்றும் நுனுக்குபன்னி (microphone) என்பவற்றில் இருந்து தகவல்களை பெற்று கார் விபத்துக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.
இந்த தொழில்நுட்பமானது கூகுளின் Pixel 4 கைப்பேசியில் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. Pixel 4 கைப்பேசியானது இம் மாதம் 15 ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.