ஆப்பிள் நிறுவனத்தின் புதிய நடவடிக்கைகள்…!!!
உலகளாவிய ரீதியில் ஆப்பிள் நிறுவனம் பிரபல்யம் அடைந்து வருகின்றது. இந்த நிறுவனம் அதிகளவான பாவனையாளர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் ஆண்டு தோறும் ஐபோன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் நிறுவனம் தனது பாவனையாளர்களுக்காக பழுது பார்க்கும் சேவையையும் அறிமுகம் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது iPhone 6 மற்றும் iPhone 6S Plus பாவனையாளர்களுக்காக ஓர் வரப்பிரசாதத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த iPhon களில் மின் இணைப்பு தொடர்பான (Power Issue) பிரச்சினைகள் இருப்பினும் அவற்றினை உடனே சரி செய்து தருகின்றது. ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த இந்த கைப்பேசிகளின் சில தொடர்களில் மேற்கண்ட பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது.
அதையடுத்து இந்த சேவையை வழங்க ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடக்கம் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை வடிவமைக்கப்பட்ட iPhone 6 மற்றும் iPhone 6S Plus கைப்பேசிகளில் இந்த பிரச்சினைகள் இருக்கின்றதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் இச் சேவையினை இலவசமாகவே ஆப்பிள் நிறுவனம் வழங்கவுள்ளது.