பனிக்கட்டிகளால் நிறைந்த அந்தாட்டிக்காவின் ஆழமான பகுதி கண்டுபிடிப்பு..!!!
அந்தாட்டிக்கா பனிக்கட்டிகளால் நிறைந்த ஒரு பகுதியாகும். வரலாற்றில் முதன் முறையாக அந்தாட்டிக்காவின் மிகவும் ஆழமான பகுதியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் இந்த பகுதியானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3.5 கிலோ மீற்றர்கள் ஆழத்தில் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் குழுவே இந்த ஆழமான பகுதியை கண்டுபிடித்துள்ளது.
அதற்கான நுண் அலைகளை பனிக்கட்டிகளுக்கு ஊடாக செலுத்தி ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 06 ஆண்டுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின் பின்னரே இந்த பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அதற்கு முன்னர் 413 மீற்றர்கள் ஆழமே அந்தாட்டிக்கா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.