பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றிய 29,000 பணியார்களின் தரவுகளோடு களவாடப்பட்ட ஹார்ட் டிஸ்க்.
உலக அளவில் பிரபல்யம் அடைந்து வருகின்ற சமூக வளையதளங்களில் பேஸ்புக்கும் ஒன்றாகும். இந்த பேஸ்புக்கை சிறியவர், பெரியவர் என பாகுபாடு இன்றி அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இது பல பில்லியன் கணக்கான பாவனையாளர்களை கொண்டுள்ளது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரிந்த சுமார் 29,000 பணியார்களின் தரவுகள் உள்ளடங்கிய ஹார்ட் டிஸ்க் ஒன்று களவாடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஹார்ட் டிஸ்க்கில் 29,000 பணியாளர்களது தனிப்பட்ட விபரங்கள் சேமிக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. அதில் இருக்கும் தரவுகள் எதுவும் என்கிரிப்ட் செய்யப்படாத நிலையில் கார் ஒன்றிலிருந்து திருடப்பட்டுள்ளது.
அந்த பணியாளர்களின் பெயர், வங்கி கணக்கு விபரம், சம்பளம் மற்றும் வழங்கப்படும் போனஸ் விபரம் என்பனவற்றுடன் சோசியல் செக்கியூரிட்டி இலக்கத்தின் இறுதி நான்கு டிஜிட்கள் போன்ற பல்வேறு விபரங்கள் திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்கில் காணப்படுகின்றது. இந்த தரவுகளை இலகுவாகப் பெற்று தவறான முறையில் பயன்படுத்த முடியும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அமெரிகாவில் பணியாற்றியவர்களின் தரவுகளே இந்த ஹார்ட் டிஸ்க்கில் காணப்படுகின்தாக குறிப்பிடப்பட்டுள்ளது.