ஜூன் 8ம் திகதி தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங்கின் முன்னாள் மெனேஜர் திஷா.! நடிகர் சுஷாந்தின் தற்கொலையில் குழப்பம்..!!
இன்றைய தினம் திடீரென தற்கொலை செய்துகொண்ட நடிகர் சுஷாந்த் சிங் தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளது. ஹிந்தி திரையின் முன்னணி நாயகனான இவர் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரினதும் பிடித்த நாயகனாக இருந்துள்ளார் என்பதற்கு இன்று இணையத்தை அதிர வைத்த ரசிகர்களே சாட்சி.
இன்று பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம் உட்பட அனைத்து இணையத்திலும் சுஷாந்த் சிங்கின் புகைப்படங்களால் நிறைந்துள்ளது. கோடி கோடியாய் பணம் நிறைந்திருந்தாலும் நண்பர்களிடம் நிம்மதி இல்லை என கூறி வந்துள்ள சுஷாந்த் சிங்கின் மரணத்தில் பல மர்மங்கள் மறைந்திருப்பதாக அவரது நண்பர்கள் கூறியுள்ளனர்.
கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் சுஷாந்த் சிங் இருக்க காரணம் என்ன என்பது தெரியாமல் பலர் இருக்க தற்போது தகவல் ஒன்று பரவியுள்ளது. சுஷாந்த் சிங்கின் மனேஜராக பணி புரிந்து வந்த திஷா என்கிற யுவதி பணியில் இருந்து விலகி சென்றதை தொடர்ந்து சுஷாந்த் சிங்கின் மேனேஜராக ஆண் ஒருவர் நியமிக்கப் பட்டார்.
விலகி சில மாதங்களில் அதாவது இந்த மாதம் (ஜூன்) 8ம் திகதி திஷா திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணத்தை பொலீஸார் விசாரணை செய்து வரும் நிலையில் இன்றைய தினம் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திஷாவின் மரணத்தின் பின் தான் சுஷாந்த் மனமுடைந்து காணப் பட்டதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு தற்கொலைக்கும் ஏதேனும் சம்மந்தம் உண்டா என்ற ரீதியில் பொலீஸார் விசாரணை ஆரம்பித்துள்ளனர்..!!