எதிர்வரும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நான் தோல்வியை தழுவினால் அதுவே அமெரிக்காவுக்கு கேடு தரும் விஷயமாகும் – டொனால்ட் டிரம்ப்
எதிர்வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் சார்பாக மீண்டும் அமெரிக்காவின் சமகால ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகிறார். இதனால் இவர்களுக்குள் வார்த்தை சாடல் தொடர்ந்து வரும் நிலையில், டிரம்ப் குறித்து பேசிய ஜோ பிடன், ” வருகிற ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியுறும் சூழல் ஏற்பட்டால், அவர் தோல்வியை ஒப்புக்கொள்ளமாட்டார். வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறமாட்டார், தேர்தலில் முறைகேடு செய்வார்” என்று கூறினார்.
குறித்த சூழலில் வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப் ” இந்த தேர்தலில் நான் தோல்வியுற்றால் அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. பிற பணிகளை கவனிக்க சென்றுவிடுவேன். எனக்கான பணிகள் அதிகளவு உள்ளது, ஒரு வேலை நான் தோல்வியுறும் சூழல் ஏற்படும் பட்சத்தில், அமெரிக்காவிற்கு மிகவும் கேடுதரும் விஷயமாக அது அமையும் ” என்று கூறினார்.