கட்டிய மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரின் கழுத்தை துப்பட்டாவால் இறுக்கி கொலை செய்த கணவன்..!!
இந்தியாவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த லோகித் என்பவருக்கு 32 வயதுடைய நயனா என்ற மனைவி உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு 5 வயதுடைய மகன் உள்ளனர். சித்ரதுர்கா பகுதியை சேர்ந்த லோகித், தனது குடும்பத்தினருடன் ஹாசன் பகுதியில் வசித்து வந்த நிலையில், மனைவியுடைய நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். இந்த விஷயம் குறித்து இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கமாகியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக்குள் வழக்கம் போல தகராறு ஏற்படவே, ஆத்திரமடைந்த லோகித் துப்பட்டாவை எடுத்து மனைவியின் கழுத்தில் சுற்றி இறுக்கியுள்ளார். இதனால் மூச்சுத்திணறி நயனா, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளார். கட்டிய மனைவியை கோபத்தில் கொலை செய்த லோகித், மறுநாள் காலையில் அங்குள்ள காவல் நிலையத்திற்கு தாமாக சென்று விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். அதைத் தொடர்ந்து ,வீட்டிற்கு சென்ற பொலிஸார் நாயனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டார். அந்த விசாரணையில், மனைவியின் நடவடிக்கையில் சந்தேகப்பட்டு கொலை செய்ததை ஒப்புக்கொண்ட நிலையில், லோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், தாயும் இறந்துவிட்ட நிலையில், தந்தையும் சிறைக்கு சென்றுள்ளதால், 5 வயது மகன் அனாதையாக அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தையை உறவினர்களிடம் பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.