இலங்கையில் இன்று மட்டும் 35 பேர் கொரோனாவால் குணமடைந்தார்!
ஸ்ரீலங்காவில் இன்று மட்டும் 35 பேருக்கு கொடிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். அதையடுத்து கொரோனா தொற்றில் இருந்து குணமானோரின் மொத்த எண்ணிக்கை 1287 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை கொரோனா தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 1887ஆக உயர்ந்துள்ளது.
இன்று மட்டும் மாலை வரை 3 பேருக்கு’கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. அவர்கள் மூவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தவர்களாவர். இந்நிலையில் 586 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.