டெஸ்லாவிலிருந்து பதவி விலகினார் எலன் மஸ்க்!
சமீபத்தில் நிகழந்த குற்றச்செயல் ஒன்றின் விளைவாக அமெரிக்காவின் மின்சாரக் கார் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து அதன் தலைவர் எலன் மஸ்க் விலகுகிறார். இவருடைய இந்த முடிவும் அவர் மீதான் கு்றச்சாட்டும் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளப் போவதாக எலன் மஸ்க் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. முதலீட்டாளர்களை தவறாக வழிநடத்தியதாக அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பானது மஸ்க்கிற்க எதிராக வந்தள்ளது. இதன்படி , எலன் மஸ்க் 3 ஆண்டுகளுக்கு டெஸ்லாவின் தலைவர் பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு 145 கோடி ரூபாய் அபராதம் விதித்து, அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் உத்தரவிட்டது. அபராதத்தை செலுத்த ஒப்புக் கொண்டுள்ள அவர், தலைவர் பதவியில் இருந்தும் விலகவுள்ளார். ஆனால் அவர் சி.இ.ஓ.வாக தொடர்ந்து நீடிப்பார். இதனிடையே தனிப்பொறுப்பு தலைவரை நியமிக்கும் மிகப்பெரிய சவால் டெஸ்லாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் எலன் மஸ்க்கின் இடத்தை பிடித்துக்கொள்ளும் சவால் அவர்கள் முன்னிலையில் உள்ளது.
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”