திருமணமான பின்பு தாலியை கழட்டி வைத்தது ஏன், முதல் முறை மனம் திறந்து கூறிய தாமரைச்செல்வி.! இதனால் தான் பிக் பாஸ் வீட்டில் தாலி இல்லாமல் இருக்கின்றாராம்.!!
பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் தாமரைச்செல்வி. ஆரம்பத்தில் இவர் மிகவும் அப்பாவியாக இருக்கிறார் என கூறிவந்த ரசிகர்கள் இல்லை தாமரைச் செல்வி நடிக்கிறார் என கூற ஆரம்பித்தனர். இதனால் ஆரம்பத்தில் இருந்த ஆதரவு இல்லாமல் போனது, பைனலுக்கு செல்லாமல் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றப் பட்டார் தாமரை.
இதனால் ரசிகர்கள் சோகத்தில் இருந்த நிலையில் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்து போட்டியிட்டு வருகிறார். இந்த நிலையில் திருமணமான தாமரைச் செல்வி ஏன் இன்னும் தாலி அணியவில்லை என்ற கேள்வி ரசிகர்களிடம் இருந்தது.
இதனை ஜூலி தாமரையிடம் கேட்க முதல் கணவர் பிரிந்த பின் தான் இரண்டாவது திருமணம் செய்துகொண்டேன். அப்போது எங்களிடம் பணம் இல்லை, அதனால் கவரிங்கில் தாலி செய்து கட்டினார். ஆனால் கவரிங் எனக்கு ஒத்து வரவில்லை, அதனால் அந்த தாலி ஒதுக்கி வைத்து விட்டேன். பணம் இருக்கும் போது தாலி போட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தோம்,
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் கண்டிப்பாக தாலி வாங்கி கட்டிக் கொள்வேன், மற்றபடி தாலியை வேறு காரணத்திற்காக கழட்டி வைக்கவில்லை என கூறியுள்ளார். கவரிங் தாலி என்பதால் தான் கழட்டினேன் என கூறியுள்ளார்.!