கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பான தகவல்களை பாவனையாளர்களுக்கு உடனுக்கு உடன் வழங்கவுள்ள வாட்ஸ் ஆப்..!!
பிரபல முன்னணி நிறுவனமான பேஸ்புக் நிர்வகித்து வருகின்ற வாட்ஸ் ஆப் செயலியினை ஏறத்தாழ 2 பில்லியன் பாவனையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அவர்களுக்கு தற்போதைய காலகட்டத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் நெருக்கடி தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு தயாராகவுள்ளது. அதற்காக உலக சுகாதார ஸ்தாபனத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளது.
முன்னரே பேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்ற முன்னணி நிறுவனங்கள் இவ்வாறான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றன. இந்த வரிசையில் வாட்ஸ் ஆப் செயலியும் இணைந்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான தவறான தகவல்கள் பரப்பப்படுவது தொடர்பில் கண்காணித்து அவற்றினை நீக்குவதுடன், மக்களுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையிலான உண்மைத் தகவல்களை கொண்டு சேர்க்கவுள்ளது.
இந்த வசதியினைப் பெறுவதற்கு மொபைலில் வாட்ஸ் ஆப்பினை திறந்து https://api.whatsapp.com/send?phone=41225017596&text=hi&source=&data= எனும் இணைப்பில் சென்று இணைய வேண்டும். அல்லது +41794752209 எனும் தொலைபேசி இலக்கத்தினை மொபைல் சாதனத்தில் சேமித்து சட் செய்ய தொடங்க வேண்டும்.