அமெரிக்காவின் செல்வந்தர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!!
அமெரிக்காவில் 66 வயதுடைய ஜெப்ரி எப்ஸ்டீன் என்பவர் சிறுமிகளைக் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக குற்றம் சுமத்திய நிலையில் கைது செய்யப்பட்டார். அதோடு இவர் பெரும் செல்வந்தர்களில் ஒருவராவார். இதையடுத்து ஹொலிவுட் திரைப்பட நட்சத்திரங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மிகவும் நெருக்கமான நபராக அவர் விளங்கினார்.
!Advert!
எப்ஸ்டீன் மீதும் பாலியல் வன்கொடுமை வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் சிறைச்சாலையில் தமது அறையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் எப்ஸ்டீனின் சடலத்தை சிறை அதிகாரிகள் மீட்டுள்ளனர். இதனை அடுத்து அவர் கடந்த ஜூலை மாதத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றதாகவும், அப்பொழுது அவரைகாப்பாற்றியதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.