இன்றைய ராசி பலன்! 19.11.2019
புரட்சி நேயர்களே அன்பான வணக்கம். இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.
1911.2019 கார்த்திகை மாதம் 03 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை ஆகும். ஸப்தமி,மரண பின் பகல் 1.59 வரை ஆயிலியம் முன் இரவு 8.20 வரையாகும். சுப நேரம் காலை 10.39 – 12.09 வரையாகும். இராகுகாலம் மதியம் 3.09 – 4.39 வரையாகும். எமகண்டம் காலை 9.09 – 10.39 வரையாகும். குளிகன் மதியம் 12.09 – 1.39 வரையாகும்.
மேஷ ராசி நேயர்களே: குடும்ப தேவைகள் சீக்கிரத்தில் நிறைவேறும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக முறையில் தீர்வு கிடைக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்றைய நாள் சிறப்பான நாளாகும்.
ரிஷப ராசி அன்பர்களே: குடும்பத்தில் குறைகள் ஏதும் இருக்காது. நீண்ட நாள் பிராத்தனைகள் நிறைவேறும். பழைய கடனை திருப்பி செலுத்துவீங்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். வியாபாரம் சூடு பிடிக்கும். தந்தையின் உடல் நலத்தில் அதிக கர்வம் தேவை. உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற் கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.
மிதுன ராசி காரர்களே: உங்கள் பெருந்தன்மையை மற்றவர்கள் புரிந்துகொள்வர். உடலிலும், மனதிலும் புது தெம்பு பிறக்கும். எந்த ஒரு செயலையும் உடனுக்குடன் செய்ய முடியும். வியாபாரம் சிறப்பாக அமையும். உத்தியோகத்தில் சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றா லும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் வெற்றியடையும். இன்றைய நாள் சாதிக்கும் நாளாகும்.
கடக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உத்தியோகத்தில் அதிக இலாபம் கிடைக்கும். பெற்றோர் ஆதரவு கிடைக்கும். இன்றைய நாள் உற்சாகமான நாளாகும்.
சிம்ம ராசி அன்பர்களே: தம்பதியினருக்கு இடையில் அன்யோன்யம் ஏற்படும். எவரையும் நம்பி ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவு களால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.
கன்னி ராசி காரர்களே: குடும்ப சுமை கூடும். வர வேண்டிய பணம் தற்போது கைக்குவந்து சேரும். திருமணப் பேச்சு வார்த்தை வெற்றி அடையும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். நண்பர்கள் தேவையறிந்து உதவி செய்வார்கள். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். இன்றைய நாள் வெற்றி அடையும் நாளாகும்.
துலாராசி உறவுகளே: குடும்பத்தில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டிவரும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சி களுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர் பார்த்த சலுகை சற்று இழுபறிக்குப் பிறகு கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய வீடு வாங்குவீங்கள்.
விருச்சிக ராசி நேயர்களே: உங்கள் வீட்டில் உள்ளவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீங்கள். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. ஆன்மீக சிந்தனை ஏற்படும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். இன்றைய நாள் நினைத்தது நிறைவேறும் நாளாகும்.
தனுசு ராசி அன்பர்களே: உங்கள் முன் கோபத்தை குறைத்து வாழ்வில் முன்னேறும் வழியை யோசிப்பீங்கள். உங்கள் பிள்ளைகளால் சமூகத்தில் அந்தஸ் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீங்கள். தாயின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர் பயணத்தால் பலன் கிடைக்கும். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் போட்டி, பொறாமை குறையும். இன்றைய நாள் புகழ், வெற்றி கிடைக்கும் நாளாகும்.
மகர ராசி காரர்களே: தூரத்து உறவினர்களின் ஆதரவு பெருகும். புதிய முயற்சிகள் வெற்றியடையும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். உத்தியோகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். தம்பதியினருக்கு இடையில் மனம் விட்டு பேசுவார்கள். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவீங்கள். இன்றைய நாள் அமோகமான நாளாகும்.
கும்ப ராசி உறவுகளே: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குடும்ப விஷய மாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். குடும்பத்தில் தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். மனம் சந்தோஷம்படியான விஷயங்கள் நடக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. தம்பதியினருக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரி களால் எதிர்பாராத ஆதாயம் உண்டாகும். இன்றைய நாள் வெற்றிக்கு வித்திடும் நாளாகும்.
மீன ராசி நேயர்களே: உங்கள் பேச்சால் அனைவரையும் கவருவீங்கள். உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவு களும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. திருமணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். இன்றைய நாள் நம்பிக்கை துளிர் விடும் நாளாகும்.