இன்றைய ராசி பலன் – 02.05.2021
இன்றைய பஞ்சாங்கம்,02-05-2021, சித்திரை 19, ஞாயிற்றுக்கிழமை, சஷ்டி திதி பகல் 02.50 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பூராடம் நட்சத்திரம் காலை 08.59 வரை பின்பு உத்திராடம். சித்தயோகம் காலை 08.59 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உறவினர்களிடையே மதிப்பு மரியாதை உயரும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.பிள்ளைகளால் மனம் மகிழும் செய்திகள் வந்து சேரும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். இதுவரை தடைப்பட்ட வேலைகள் எல்லாம் இனிதே முடியும்.
ரிஷப ராசி அன்பர்களே:ராசிக்கு பகல் 02.45 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நயமாகப் பேசுபவர்களை நம்பாதீர்கள். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.விநாயகரை தியானித்து வழிபட எதிரிகள் வகையில் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நண்பர்களின் மூலம் முக்கிய பிரச்னை ஒன்று நல்லபடி முடிவுக்கு வரும்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு பகல் 02.45 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். சகோதர வகையில் வீண்செலவுகள் ஏற்படும். எதிலும் பொறுமை தேவை. உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்து இருந்த காரியம் இழுபறியாக முடியும்.
கடக ராசி நேயர்களே:பூர்வீக சொத்துக்களால் நல்ல லாபம் கிடைக்கும்.எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனதில் துணிச்சலுடன் முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும்.உறவினர் நண்பர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். புதிய முயற்சிகளைத் திட்டமிடலாம். உத்தியோக ரீதியாக பயணங்கள் செல்லும் வாய்ப்பு உருவாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வீட்டிலேயே தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள்.நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்
கன்னி ராசி காரர்களே:தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.தாய்வழி உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும்.அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். நெருங்கியவர்கள் மூலம் வீண் பிரச்சினைகள் வரலாம். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும்.
துலாராசி உறவுகளே:பிள்ளைகளின் செயல்களில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும்.பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும்.எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் செலவுகள் அதிகமாகலாம். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள். அனுகூலமான பலன்கள் ஏற்படும்.
தனுசு ராசி அன்பர்களே:திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். தாய்வழி உறவினர்களுடன் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும்.நண்பர்களின் சந்திப்பு நன்மையை தரும்.
மகர ராசி காரர்களே:அரசு காரியங்கள் தாமதமாக முடியும்.சிலருக்கு பிள்ளைகள் மூலம் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.வேலையில் மற்றவர்களிடம் விட்டு கொடுத்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உறவினர்கள் நண்பர்களுடன் மனத்தாங்கல் வந்து நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.
கும்ப ராசி உறவுகளே:எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும்.குடும்பத்துடன் வீட்டில் தெய்வப்பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.பெற்றோரு டன் மனம் விட்டு பேசுவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.சுபசெலவுகள் செய்ய நேரிடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் விவாதம் வந்து நீங்கும்.
மீன ராசி நேயர்களே:
பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும்.உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.குடும்பத்தில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். உறவினர் நண்பர்களால் ஆதாயம் உண்டு.