இன்றைய ராசி பலன் – 03.02.2021
இன்றைய பஞ்சாங்கம், 03-02-2021, தை 21, புதன்கிழமை, சஷ்டி திதி பகல் 02.12 வரை பின்பு தேய்பிறை சப்தமி. சித்திரை நட்சத்திரம் இரவு 09.07 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00
மேஷ ராசி நேயர்களே:
மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும்.மற்றவர்களுடன் வீண் விவாதம் செய் வதை தவிர்ப்பது நல்லது.மனதிற்கு பிடித்த பொருளை வாங்கி மகிழ்வீர்கள்.இளைய சகோதர வகையில் ஆதாயம் உண்டு.
ரிஷப ராசி அன்பர்களே:
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்.நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். எதிரிகள் வகையில் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் விலகும்.குடும்பத்தில் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.பழைய சிக்கலில் ஒன்று தீரும்.
மிதுன ராசி காரர்களே:
உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே மூன்றாவது நபரின் தலையீடு காரணமாக ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.உறவினர்கள் முலம் எதிர்பார்த்த காரியங்கள் ஏமாற்றத்தை அளிக்கும்.
கடக ராசி நேயர்களே:
பயணங்களால் ஆதாயம் உண்டு.ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை.பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் கிட்டும். வாழ்க்கைத்துணைவழியில் செலவுகள் ஏற்படும்.உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். பிள்ளைகளால் வீட்டில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மற்றவர்களுடன் தேவையற்ற வீண்சர்ச்சைகளில் ஈடுபடவேண்டாம்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பிள்ளை களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள்.வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். கடன்கள் குறையும்.
கன்னி ராசி காரர்களே:
குடும்பத்தில் மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்கள் வழியில் வீண் பிரச்சினைகள் தேடி வரலாம். கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையும்.உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
துலாராசி உறவுகளே:
உடன்பிறப்புக்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் பணிகளில் பங்கெடுத்துக் கொள்வது ஆறுதலாக இருக்கும்.பெண்களுக்கு திருமண பாக்கியம் கைகூடி வரும். சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.வேலை நிமித்தமாக வெளிநாட்டிற்கு பயணம் செல்ல வேண்டி வரலாம். பிள்ளைகள் உதவி கரமாக இருப்பார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது.நினைத்த காரியத்தை நல்லபடியாக செய்து முடிக்க இடையூறுகள் ஏற்படலாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:
குடும்பத்தில் எதையும் ஆலோசனை செய்து முடிவெடுங்கள். பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல செய்தி வரும். சிலருக்கு திடீர் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உத்யோகஸ்தர்கள் வேலை இழந்தவர்கள் மீண்டும் பணியில் சேருவீர்கள். பிற்பகலுக்குமேல் கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:
வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். வாழ்க்கைத்துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும். உற்றார் உறவினர்களின் ஆதரவு மகிழ்ச்சியை அளிக்கும்.பிற்பகலுக்குமேல் ஓரளவு நிம்மதியும் உற்சாகமும் ஏற்படும்.தொழில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்ட முடியும்.
கும்ப ராசி உறவுகளே:
ராசிக்கு காலை 09.49 வரை சந்திராஷ்டமம் இருப்பதால்
தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே வீண்விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை மற்றும் நிதானம் அவசியம். எதிலும் எச்சரிக்கை அவசியம்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு காலை 09.49 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்களால் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.எதிரிகள் வகையில் சற்று கவனமுடன் செயல்படவும். வரவை விட செலவுகள் அதிகமாகும்.எடுத்த காரியத்தை முடிப்பதில் சற்று சிரமம் ஏற்படும்.வீண் செலவுகளை குறைத்துக் கொண்டால் நெருக்கடிகளை சமாளிக்கலாம்.