இன்றைய ராசி பலன் – 03.05.2021
இன்றைய பஞ்சாங்கம், 03-05-2021, சித்திரை 20, திங்கட்கிழமை, சப்தமி திதி பகல் 01.40 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. உத்திராடம் நட்சத்திரம் காலை 08.22 வரை பின்பு திருவோணம். மரணயோகம் காலை 08.22 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஹயக்ரீவருக்கு உகந்த நாள். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும்.பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களின் அணுகுமுறையை மற்றவர் களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்து கொள்வீர் கள். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும்.
ரிஷப ராசி அன்பர்களே:பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை.கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மிதுன ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சகோதரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்து கொடுத்துப்போவது நல்லது. உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.உத்தி யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். மனதில் இனம் தெரியாத குழப்பங்கள் ஏற்பட்டு விலகும்.
கடக ராசி நேயர்களே:உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும்.உறவினரி டம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.வியாபாரத்தில் கூட்டாளிகள் வழியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள்.ஆனால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும்.பிற்பகலுக்கு மேல் தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும்.
கன்னி ராசி காரர்களே:வண்டி வாகனங்களால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும்.பிள்ளைகளுக்காக செலவு செய்ய நேரிடும்.பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள்.
துலாராசி உறவுகளே:திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.எதிலும் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும். திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி முடியும்.
விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும்.நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும்.மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும்.வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே:உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படும்.அரைகுறையாக நின்ற வேலைகள் உடனே முடியும். பயணங்களால் அலைச்சல் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.ஒரு அமைதியான சூழல் உருவாகும்.
மகர ராசி காரர்களே:பண வரவுகள் சிறப்பாக இருக்கும்.தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மற்றவர்களுக்காக நியாயம் கேட்கப் போய் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதர வாக இருப்பார்.வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். கடன்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். உடல் நலம் சீராகும்.வீண் அலைச்சலைத் தவிர்க் கவும்.
கும்ப ராசி உறவுகளே: எதிர்பார்த்த இடத்தில் இருந்து உதவிகள் கிடைக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பிள்ளைகளின் பிடிவாதத்தை அனுசரணையான பேச்சால் சரி செய்யுங்கள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறி, உங்கள் அறிவுரைப்படி செயல்படுவார்கள்.குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும்.வியாபா ரத்தில் இழந்ததை மீட்பீர்கள்.
மீன ராசி நேயர்களே:
தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும்.