இன்றைய ராசி பலன் – 03.11.2020
இன்றைய பஞ்சாங்கம், 03-11-2020, ஐப்பசி 18, செவ்வாய்க்கிழமை, திரிதியை திதி பின்இரவு 03.25 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ரோகிணி நட்சத்திரம் பின்இரவு 02.30 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் பின்இரவு 02.30 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. முருக வழிபாடு நல்லது. கௌரி விரதம்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும். கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம்.உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
ரிஷப ராசி அன்பர்களே:
உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.வெளியூர் பயணங்களில் புதிய நட்பு உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். . உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே:
பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. குடும்பத்தினர் உங்களுடைய முயற்சிக்குப் பக்கபலமாக இருப்பார்.. சகோதர வகையில் மனத்தாங்கல் வந்து நீங்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.
கடக ராசி நேயர்களே:
உறவினர்களால் மனசங்கடங்கள் ஏற்படலாம். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். மற்றவர்கள் மனதை புரிந்துகொள்ள தொடங்குவீர்கள். வாழ்க்கைத்துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
சிம்ம ராசி அன்பர்களே:
புதுப்பொருள் வந்து சேரும். எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக் கவும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.. குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.உங்களால்பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.
கன்னி ராசி காரர்களே:
போட்டி பொறாமைகள் மறையும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.வேலையில் தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். நண்பர்களால் உதவி உண்டு.சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். உறவினர்களின் ஆதரவுக் கிட்டும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம்.முக்கிய விஷயங்களை நேரடியாக சென்று செய்வது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் தேவை.வியாபாரத்தில் கூட்டாளிகளால் வீண் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.
விருச்சிக ராசி நேயர்களே:
வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. மாலையில் உறவினர் ஒருவர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கக்கூடும். குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே:
பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள்.சகோதர வகையில் எதிர்பார்க்கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும்.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பிள்ளைகளால் அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும்.
மகர ராசி காரர்களே:
பொறுமையுடனும் சிக்கனத்துடனும் செயல்படுவது நல்லது. சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறு மையைக் கடைப்பிடிக்கவும். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:
பிள்ளைகளால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும்.குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்கள் நீங்கி சுமுகமான சூழ்நிலை ஏற்படும்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். திருமண பேச்சுவார்த்தைகளில் இழுபறி நிலை ஏற்படும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது.
மீன ராசி நேயர்களே:
சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பீர்கள்.குடும்பம் தொடர்பான முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.