இன்றைய ராசி பலன் – 04.11.2021
இன்றைய பஞ்சாங்கம்,04-11-2021, ஐப்பசி 18, வியாழக்கிழமை, அமாவாசை திதி பின்இரவு 02.44 வரை பின்பு வளர்பிறை பிரதமை. சித்திரை நட்சத்திரம் காலை 07.42 வரை பின்பு சுவாதி நட்சத்திரம் பின்இரவு 05.07 வரை பின்பு விசாகம். சித்தயோகம் காலை 07.42 வரை பின்பு அமிர்தயோகம் பின்இரவு 05.07 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 0 ஜீவன் – 0. அமாவாசை. தீபாவளிப் பண்டிகை. லட்சுமி குபேர பூஜை. லக்ஷ்மிநரசிம்மருக்கு உகந்த நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:தந்தை யின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ் வீர்கள்.தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:சிலருக்குக் குடும்பத்துடன் குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் அமையும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக் கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும்.
மிதுன ராசி காரர்களே:நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.எந்த விஷயத்திலும் நிதானமாக நடந்து கொள்வது நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:பிள்ளைகளால் சிறு சிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும்.
சிம்ம ராசி அன்பர்களே: உங்களால் வளர்ச்சி யடைந்த சிலரை சந்திக்க நேரிடும். உறவினர்களால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். தெய்வப்பணிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம்.தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். அவர்கள் கேட்டதை வாங்கித் தர முயற்சி செய்யவும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.பூர்வீக சொத்துக்கள் வழியாக லாபம் கிட்டும்.
துலாராசி உறவுகளே:குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த முயற்சிப்பார்கள். கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் பிள்ளைகளால் சில பிரச்னைகள் ஏற்படும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.தேவையில்லாத அலைச்சலால் மன உளைச்சல் ஏற்படலாம். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும்.எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படக்கூடும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும்.தாயின் அன்பு ஆறுதலாக இருக்கும். பெண்களுக்கு பணிசுமை குறையும்.வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் மிக அவசியம்.
தனுசு ராசி அன்பர்களே:கல்யாண முயற்சிகள் பலிதமாகும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சகோதரர்கள் உங்களுடைய யோசனையை ஏற்றுக்கொள் வார்கள்.குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும். மாலையில் உறவினர்கள் மூலம் காரியம் அனுகூலமாகும்.
மகர ராசி காரர்களே:உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள்.சிலருக்கு உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். பிரச்சினையின் ஆணிவேரை கண்டறிவீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்ப வர்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர, சகோதரிகள் மூலம் அனுகூலம் கிட்டும்.
கும்ப ராசி உறவுகளே:சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும்.நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். குடும்பத்தினருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத் தில் கவனம் தேவை.கொடுக்கல் வாங்கலில் இழுபறி நிலை உண்டாகலாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும்.
மீன ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர் நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லதுமற்றவர்கள் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது..குடும்பப் பெரியவர்கள் அனுசரணையாக இருப்பார்கள்.