இன்றைய ராசி பலன் – 07.05.2021
இன்றைய பஞ்சாங்கம், 07-05-2021, சித்திரை 24, வெள்ளிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 03.32 வரை பின்பு தேய்பிறை துவாதசி. பூரட்டாதி நட்சத்திரம் பகல் 12.26 வரை பின்பு உத்திரட்டாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:திடீர் பயணங்கள் செலவுகளால் திணறுவீர்கள். தந்தையின் நீண்டநாள் விருப்பத்தை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.வீண் செலவுகளை தவிர்ப்பதன் மூலம் தேவைகள் பூர்த்தியாகும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும்.பணவரவு சுமாராக இருக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்குப் பணவரவு இருந்தாலும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார்.குடும்ப விஷயமாக முக்கிய முடிவு எடுக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும்.புதிய பொருட்களை வாங்குவீர்கள்.உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள்.
மிதுன ராசி காரர்களே:குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை நிலவும்.வாழ்க்கைத்துணை கேட்பதை வாங்கித் தந்து மகிழ்விப்பீர்கள்.உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்று ஏற்பாடாகும். வேலையில் நல்ல மாற்றங்கள் ஏற்படும்.சிலருக்கு வீண் அலைச்சலுடன் உடல் அசதியும் ஏற்படக்கூடும்.திடீர் முடிவுகள் எடுப்பீர்கள்.
கடக ராசி நேயர்களே:பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைப்புத் தருவார். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத சோர்வு ஏற்படக்கூடும்.உறவினர் முன்கோபத்தால் பகை உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் செலவுகள் ஏற்படும். அனைவரையும் அனுசரித்து செல்வது நல்லது.எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும்.உங்களை அறியாமலேயே தாழ்வுமனப்பான்மை தலை தூக்கும்.
கன்னி ராசி காரர்களே:உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.நீண்ட நாள்களாக நீங்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த நல்ல செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும்.வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடிவருவார்கள்.
துலாராசி உறவுகளே:எதிரியாக இருந்தவர்கள் கூட நண்பராக மாறும் சூழ்நிலை ஏற்படும்.கடன்கள் விஷயத்தில் கவனம் தேவை.வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்
விருச்சிக ராசி நேயர்களே:அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். மறைமுக எதிர்ப்புகள் விலகும்.தேவையற்ற செலவுகளால் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.தொழிலில் உள்ள மந்த நிலை மாறும்.
தனுசு ராசி அன்பர்களே:எதையும் செய்வதற்கு முன் சிந்தித்து செய்வது நல்லது. வீட்டுப் பராமரிப்புப் பணி களில் சுறுசுறுப்பாக ஈடுபடுவீர்கள்.பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.
மகர ராசி காரர்களே:தொழிலில் உள்ள போட்டி பொறாமைகள் ஓரளவு குறையும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்யவேண்டாம்.உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். எதிரிகள் வகையில் எச்சரிக்கை தேவை. பெரிய மனிதர்களின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.சொத்துப் பிரசினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.
கும்ப ராசி உறவுகளே:தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும்.சிலருக்கு தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
நீங்கள் நகைச்சுவைக்காக சொல்ல கூடிய சில கருத்துக்கள் கூட சீரியசாக வாய்ப்பிருக்கிறது.செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் வழியாக அனுகூலம் கிட்டும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும்.