இன்றைய ராசி பலன் – 08.09.2020
இன்றைய பஞ்சாங்கம், 08-09-2020, ஆவணி 23, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி இரவு 12.03 வரை பின்பு தேய்பிறை சப்தமி. பரணி நட்சத்திரம் காலை 08.26 வரை பின்பு கிருத்திகை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1/2. சஷ்டி. கிருத்திகை. முருக வழிபாடு நல்லது. இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
குடும்பத்தினரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பிள்ளைகளால் வீண் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.சந்தேக புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும்.
ரிஷப ராசி அன்பர்களே:
தொழில் ரீதியாக வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். நேரத்துக்குச் சாப்பிடமுடியாதபடி ஒன்று மாற்றி ஒன்று ஏதேனும் வேலை இருந்தபடியிருக்கும்.வெளி வட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்.வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம்.
மிதுன ராசி காரர்களே:
குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள்.அரசு துறை சார்ந்தவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும்.
கடக ராசி நேயர்களே:
உறவினரிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பப் பொறுப்புகளை முடிப்பதில் சற்று அலைச்சல் ஏற்படும்.பழைய பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த் தபடி இருக்கும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம்.
சிம்ம ராசி அன்பர்களே:
எதிரியாக இருந்தவர்கள் நண்பர்களாக மாறி செயல்படுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. மாலையில் பிள்ளைகளுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பணப்புழக்கம் கணிசமாக உயரும்.
கன்னி ராசி காரர்களே:
பகல் 03.10 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை.ருங்கியவர்கள் சிலர் உங்களை உதாசீனப்படுத்தி பேசுவார்கள். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் ஏற்பட்டாலும், அவர்களால் சில பிரச்னைகளும் ஏற்படக்கூடும்.செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம்.மாலையில் மற்றும் நண்பர்கள் தொடர்பு கொண்டு பேசுவது ஆறுதல் தரும்.
துலாராசி உறவுகளே:
பகல் 03.10 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும்.குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் உருவாகலாம். இளைய சகோதர வகையில் செலவுகள் ஏற்படும்.தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும்.ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
விருச்சிக ராசி நேயர்களே:
கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும்.குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.பழைய சொந்தங்கள் தேடி வரும்.
தனுசு ராசி அன்பர்களே:
சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். சிலருக்குத் தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்.
மகர ராசி காரர்களே:
தேவையற்ற செலவுகளை சமாளிக்க பிறரிடம் கடன் வாங்க நேரிடும். அவசியத் தேவை இருந்தால் மட்டுமே தக்க முன்னேற்பாடுகளுடன் வெளியில் செல்லவும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார்.தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து செல்லும் தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
கும்ப ராசி உறவுகளே:
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.பூர்வீக சொத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். சிலருக்கு இளைய சகோதரர்கள் மூலம் பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு.சகோதர வகையில் நன்மை உண்டு.
மீன ராசி நேயர்களே:
எதிர் பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாழ்க்கைத்துணை நீங்கள் கேட்டதை வாங்கித் தருவார். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.வெளிவட்டாரத்தில் மகிழ்ச்சி தங்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும்.