இன்றைய ராசி பலன் – 09.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 09-10-2020, புரட்டாசி 23, வெள்ளிக்கிழமை, சப்தமி திதி மாலை 05.50 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. திருவாதிரை நட்சத்திரம் இரவு 12.26 வரை பின்பு புனர்பூசம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. அம்மன் வழிபாடு நல்லது. இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். சகோதரர்கள் குடும்பம் தொடர்பான விஷயத்தில் உங்களிடம் ஆலோ சனை கேட்டு வருவார்கள். திருமண சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு அவ்வப்போது சிறுசிறு சலனங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். மாலை யில் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புதுவாகனம் வாங்குவீர்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:பழைய பிரச்சினைகள் தீரும். சிலருக்கு நண்பர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். சுபகாரிய முயற்சிகளில் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும்.
மிதுன ராசி காரர்களே:கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பிள்ளைகளின் உற்சாகம் உங்களையும் தொற்றிக்கொள்ளும்.உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும்.விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த காரியம் அனு கூலமாக முடியும். யாருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.
கடக ராசி நேயர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:உங்கள் தேவையறிந்து நண்பர் செய்யும் உதவி மகிழ்ச்சி தரும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள்.கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.
கன்னி ராசி காரர்களே: வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். பெரியவர்களின் ஆலோசனை அவசியம். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் அவ சியம். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரும். தந்தையுடன் ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். தொழிலில் உங்கள் மதிப்பும் மரியாதையும் உயரும்.
துலாராசி உறவுகளே:உங்கள் முயற்சியில் எதிர்ப்புகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். சிலருக்கு நண்பர்களின் மூலம் ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். துணிச்சலுடன் முடிவு எடுக்கும் திறன் அதிகரிக்கும்.தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும்.
விருச்சிக ராசி நேயர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் சச்சரவுகள் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். சிலர் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழி பாடு செய்வீர்கள்.உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்து கொள்ளாதீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. மூன்றாவது நபர்களின் தலையீடு காரணமாக கணவன் – மனைவிக்கிடையே பிரச்னை ஏற்படக்கூடும் ,சகோதரர்களால் பயனடைவீர்கள். அனுசரித்துச் செல்வது நல்லது.நண்பர்களின் ஆலோசனைகளால் தொழிலில் உள்ள பிரச்சினை குறையும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் மறையும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகர ராசி காரர்களே: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தாய்வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.பழைய உறவினர் நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சகோதரர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
கும்ப ராசி உறவுகளே:உடல்நலனில் கவனம் தேவை. உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். சிலருக்கு எதிர்பாராத செலவுகளுடன் தேவையற்ற அலைச்சலும் ஏற்படும்.மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம். அடிக்கடி மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற் பட்டு நீங்கும்.நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். பிள்ளைகளின் படிப்பில் சற்று ஆர்வம் குறையும். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. ஆரோக்கிய ரீதியாக பலவீனமாக காணப்படுவீர்கள்.தாய்வழி உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.