இன்றைய ராசி பலன் – 12.10.2020
இன்றைய பஞ்சாங்கம், 12-10-2020, புரட்டாசி 26, திங்கட்கிழமை, தசமி திதி மாலை 04.39 வரை பின்பு தேய்பிறை ஏகாதசி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு மகம். சித்தயோகம் இரவு 12.29 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. நவகிரக வழிபாடு நல்லது. தனிய நாள். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம்- காலை 07.30 -09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:உடல்நிலையில் சிறு சிறு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும்.தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பது மகிழ்ச்சி தரும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
ரிஷப ராசி அன்பர்களே:உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். உறவினர்களால் குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள், வீண் செலவுகளும் ஏற்படக்கூடும். சொத்துவாங்குவது விற்பது லாபகரமாக அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும்.
மிதுன ராசி காரர்களே:உடல் ஆரோக்கியம் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். மற்றவர்களுடன் பேசும்போது மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம்.தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் லாபத்தை அடைய முடியும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
கடக ராசி நேயர்களே: வேலை தேடுபவர்க்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைகக்கூடும். குடும்பத்தில் சந்தோஷம்இருக்கும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், உணவு விஷயத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக இருக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். அவசர முடிவுகளை தவிர்க்க பாருங்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.உறவினர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். தாயின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உறவினர் நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் மனச் சஞ்சலம் ஏற்படுத்தும். கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
கன்னி ராசி காரர்களே:குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு.காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும்.பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
துலாராசி உறவுகளே:வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும்.உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சகோதர வகையில் எதிர் பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர் கள்.குடும்பத்தில் சுபசெலவுகள் உண்டாகும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட உதவியை செய்வார்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும். உறவினர்களால் மதிக்கப்படுவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.வேலையில் எதிர்பாராத இடமாற்றத்தால் மன குழப்பம் ஏற்படும். சகோதரர்களுக்காக செலவு செய்ய நேரிடும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள்.குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படும்.முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பொருளாதார ரீதியாக நெருக்கடிகள் உண்டாகலாம். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் தலையீடு காரணமாகக் குடும்பத்தில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.உடல் நிலையில் அசதி சோர்வு உண்டாகும். புதிய முயற்சிகளை மேற் கொள்ளவேண்டாம். சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாம்.
மகர ராசி காரர்களே: தந்தை வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.கொடுத்த கடன்கள் வசூலாகும். தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கும்ப ராசி உறவுகளே: : கணவன்- மனை விக்குள் அன்னியோன்யம் பிறக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும்.எதிர்பார்த்த வங்கி கடன் கிடைக்கும் வாய்ப்பு உருவாகும். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.உறவினர்கள் நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள்.
மீன ராசி நேயர்களே:
வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் மனதுக்கு உற்சாகம் தரும்.சந்தேகத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டிஇருக்கும். உறவினர்கள் வகையில் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். புதிய முயற்சியைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.