எச்சரிக்கை : அரிசி வாங்கும் போது இந்த விடயத்தை கவனியுங்கள் மக்களே… இல்லாவிட்டால் ஆபத்து..!!
பச்சரிசி”பருமனாக இல்லமால், உடலில் எந்த சத்துமின்றி, கொழுப்பு சத்தே இல்லையா எனும் அளவுக்கு மெலிந்து பலவீனமாக உள்ளவர்கள் இந்த அரிசியை சாப்பிடலாம். ஜீரணப் பிரச்சனை உள்ளவர்கள் பச்சரிசி சாப்பிடக் கூடாது. சிவப்பரிசி”இதில் பைபர் அதிகமாக உள்ளது. அதை சாப்பிடுவதால் ரத்தத்தில் அதிகமாக கொழுப்பு சேராது. அதில் எண்ணெய் தன்மை இருப்தால் ரத்த அழுத்தம் குறைவடையும்.
பாஸ்மதி அரிசி”இது மற்றைய அரிசியை விட பைபர் சக்தியை உடலுக்கு வழங்குகிறது.
மூங்கில் அரிசி நார்ச்சத்து அதிகமுள்ள அரிசி, அதை தொடர்ந்து சாப்பிட்டால் சக்கரையின் அளவை குறைத்து உடலை வலிமையாக வைத்திருக்க உதவும். நரம்பு தளர்ச்சியுள்ளவர்களும் இதை சாப்பிடலாம் நல்ல தீர்வை கொடுக்கும்.
மாப்பிள்ளை சம்பா,இதில் புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் நிறைந்துள்ளது. அதை சாப்பிடுவதால் நரம்பு வலுப்படும்.சீரகச் சம்பா இனிப்புத்தன்மை உள்ளது . இதை சாப்பிட்டால் சிறுவாத நோய்களை தீர்க்கும்.
தினை அரிசி.இரத்த சோகையை அகற்றி, காய்ச்சல், சளி இருந்தால் குறைக்கும். இதனை அதிகமாகவும் எடுக்கக்கூடாது. பித்தமாக்கிவிடும்.
வயிற்றுக்கடுப்பு, குடல் வறட்சி இருப்பவர்கள் அரிசி உலையில் கொதிக்கும் போது ஒரு டம்ளர் நீரை எடுத்து, வெண்ணை அல்லது நெய் சேர்த்து குடிக்க வேண்டும். இதை சர்க்கரை நோயுள்ளவர், இதய நோயுள்ளவர், உடல் பருமன் உள்ளவர்கள் சாப்பிடக்கூடாது.
இவர்கள் அரிசி வகைகளில் சாமை, தினை மட்டுமே எடுக்க வேண்டும்.சோறு இரவில் சாப்பிடக்கூடாது காரணம் பகலில் உடலின் வளர்சிதை அதிகமாக இருக்கும். அதனால் கார்போவைதரைட் உடலுக்கு சக்தியாக அமையும். ஆனால் இரவில் வளர்சிதை குறைவாக இருப்பதால் கார்போவைதரைட் கொழுப்பாக மாறி உடலில் சேரும் . இதனால் இரவில் அரிசி உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.