இன்றைய நாட் பலன் உங்களுக்கு எப்படி? ராசிபலன்!!
நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.இன்றைய பஞ்சாங்கம்
12-12-2018, கார்த்திகை 26, புதன்கிழமை, பஞ்சமி திதி இரவு 11.06 வரை பின்பு வளர்பிறை சஷ்டி. திருவோணம் நட்சத்திரம் மாலை 04.36 வரை பின்பு அவிட்டம். சித்தயோகம் மாலை 04.36 வரை பின்பு பிரபலாரிஷ்ட யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.இராகு காலம் மதியம் 12.00-1.30, எம கண்டம் காலை 07.30-09.00, குளிகன் பகல் 10.30 – 12.00, சுப ஹோரைகள் காலை 06.00-07.00, காலை 09.00-10.00, மதியம் 1.30-2.00, மாலை 04.00-05.00, இரவு 07.00-09.00, 11.00-12.00.
மேஷம் : நண்பரிடம் சொந்த விஷயங்களை பேசுவீர்கள். நல்ல தீர்வுக்கான ஆலோசனை கிடைக்கும். தொழில், வியாபார வளர்ச்சி இலக்கு எளிதில் நிறைவேறும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் புதிய முயற்சியால் கிடைக்கும்.
ரிஷபம்: உற்சாகமான நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. ஆனால், குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் போட்டிகளைச் சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள்.
மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
கடகம்:நீங்கள் செய்யும் வேலைகளில் ஆர்வத்தோடு ஈடுபடுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நண்பர்களின் ஒத்துழைப்பு கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும்.
சிம்மம் : எதிர்பார்த்த காரியம் வெற்றிச் செய்தி தரும். நண்பரிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் அபிவிருத்தி பணி சிறப்பாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். இஷ்டதெய்வ வழிபாடு நடத்துவீர்கள்.
கன்னி: மகிழ்ச்சியான நாள். குடும்பப் பொறுப்புகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். பிள்ளைகள் கேட்பதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். உங்கள் முயற்சிக்கு பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் ஆதாயம் உண்டாகும். அலுவலகப் பணிகளில் சக ஊழியர்களின் உதவி ஆறுதல் தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
துலாம்: நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவி யால் சில காரியங்களை முடிப்பீர்கள். புது வேலை அமையும். வெளிவட்டாரத் தொடர்பு கள் அதிகரிக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத் தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். உழைப்பால் உயரும் நாள்.
விருச்சிகம்:நீங்கள் ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். சிலருக்கு அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சுப முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள்.
தனுசு : கடந்த கால பிரச்னையை பிறரிடம் சொல்ல வேண்டாம். அதிக உழைப்பால் பணி இலக்கு நிறைவேறும். அளவான பணவரவு கிடைக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும்.
மகரம்: புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் நலனில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் குறைவாகவே கிடைக்கும். சக வியாபாரிகளால் பிரச்னை ஏற்படக்கூடும்.
கும்பம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதிர்பாராத திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்ய லாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வரக்கூடும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மீனம்:புதிய முயற்சிகள் செய்வதற்கு அனுகூலமான நாளாகும். பிள்ளைகள் தம் பொறுப்பு அறிந்து செயல்படுவர். உடன்பிறந்தவர்களால் இல்லத்தில் மகிழ்ச்சி கூடும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் பெருகும்.