கட்டாயத்தின் பேரில் விளையாட்டில் ஈடுபட்ட மாணவி ஆடுகளத்திலே மயங்கிச் சரிந்து பரிதாப மரணம்….!
என்னதான் பிள்ளைகள் ஆரோக்கியமாக வளர்ந்தாலும் இக் காலத்தில் அவர்களுக்கு ஏற்படும் நோய்களும் தாக்கங்களும் திடீரென்று யாராலும் கண்டுபிடிக்கப்பட முடியாமல் போய்விடுகின்றன. இந்நிலையில் அவர்களது வழமைக்கு மாறான செயற்பாடுகளின் போது அவர்களுக்கு இருக்கின்ற நோய்த் தாக்கம் இறுதியில் அவர்களின் உயிரையே பறித்துவிடும் கொடூரமும் நிகழ்ந்து விடுகின்றது.
அவ்வாறான ஓர் சம்பவம் தான் சென்னை சோலையூரில் இடம்பெற்றுள்ளது. அவ்வூரைச் சேர்ந்த பாஸ்டர் ஜெராஜ்ஜின் மகள் மகிமா(வயது 18) தாம்பரத்திலுள்ள பிரபல கல்லூரியில் வேதியியல் முதலாமாண்டு கற்று வருகின்றார். கல்லூரியின் அனைவருக்கும் விளையாட்டு திட்டத்தினால் மகிமா கட்டாயப்படுத்தப்பட்டு கூடைப்பந்தாட்ட குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டு விளையாட்டு நிகழ்வில் பங்கேற்கச் செய்யப்பட்டுள்ளார்.
உங்கள் Android Mobile இல் Puradsifm application டவுண்லோட் செய்துள்ளீர்களா? என்னது இன்னமும் இல்லையா? 24 மணி நேரமும் மிகத் துல்லியமான ஒலித் தெளிவில், மிக வித்தியாசமான ஒலி நயத்தில் உங்கள் Android Mobile இல் புரட்சி வானொலியைக் கேட்டு மகிழலாம், இசைஞானியின் என்றும் இனிக்கும் இனிய கீதங்கள், மனதை மயக்கும் 90களின் தெவிட்டாத மெட்டுக்கள், இசைப்புயலின் இனிய பாடல்கள், என இவை அனைத்தையும் ஒரே Mobile Application இல் கேட்டு மகிழலாம். அது மட்டுமன்றி எமது செய்திப் பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ளலாம். ஒரே ஒரு தடவை டவுண்லோட் செய்து நம்ம வானொலியைக் கேட்டுப் பாருங்கள், நிச்சயமாக உங்களுக்குப் பிடிக்கும், உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும், புரட்சி வானொலியை உங்கள் Android Mobile இல் கேட்டு மகிழலாம். நம்ம வானொலி பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள், மொபைல் Application Play Store இல் டவுண்லோட் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்கள்.
விளையாட்டின் நடுவே அவர் மயங்கிச் சரிந்துள்ளார். இதனால் அம்புலன்ஸ் மூலம் தனியார் வைத்தியசாலைக்கு அவர் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு மகிமாவைப் பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் மாணவியின் .இறுதி நிகழ்வுக்கு வந்திருந்த கல்லூரி முதல்வரைச் சூழ்ந்துகொண்ட இறந்த மாணவியின் உறவினர்கள் அவரின் இறப்புக்கு கல்லூரி நிர்வாகமே காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுடபட்டிருந்தனர். எனினும் பின்னர் பொலிசாரின் தலையீட்டினால் முதல்வர் அங்கிருந்து விலக்கி கூட்டிச் செல்லப்பட்டுள்ளார்.
இது ஆசிரியர்கள் அனைவரும் சிந்திக்கவேண்டிய விடயமாகும். என்னதான் ஆசிரியர்கள் ஒவ்வொரு பிள்ளைகள் பற்றி அறிந்து வைத்திருந்தாலும் அதனையும் தாண்டி அவர்களுக்கு உடலியல் ரீதியாக இருக்கக்கூடிய பலவீனங்கள் நோய் நிலைகள் என்பவற்றை அவர்களின் பெற்றோர்களுடன் கலந்தாலோசித்து விளையாட்டு போன்ற நிகழ்வுகளில் ஈடுபடுத்துவது என்றும் வரவேற்கத்தக்கதே…
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”