இன்றைய ராசி பலன் – 13.01.2022
இன்றைய பஞ்சாங்கம், 13-01-2022, மார்கழி 29, வியாழக்கிழமை, ஏகாதசி திதி இரவு 07.33 வரை பின்பு வளர்பிறை துவாதசி. கிருத்திகை நட்சத்திரம் மாலை 05.07 வரை பின்பு ரோகிணி. நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. கிருத்திகை. ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி விரதம். முருக-பெருமாள் வழிபாடு நல்லது. போகிப் பண்டிகை. புதிய முயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:பாதியில் நின்ற வேலைகள் முடியும். தேவையான பணம் கையில் இருந்தாலும், வீண்செலவுகளால் மனம் சஞ்சலப்படும்.வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். உறவினர்களால் குடும்பத் தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.
ரிஷப ராசி அன்பர்களே:உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சி ஒன்றுக்கான பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும்.உடன் பிறந்தவர்களிடம் ஒற்றுமை பலப்படும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும்.மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும்
மிதுன ராசி காரர்களே: தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உங்களுடைய முயற் சிக்கு வாழ்க்கைத் துணை பக்கபலமாக இருப்பார்.சகோதர வகையில் அலைச்சல் உண்டு. சிலருக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. திட்டமிட்ட காரியத்தை செய்து முடிப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம்.
கடக ராசி நேயர்களே:கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.பிள்ளைகளின் பழக்கத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத்துணையின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள்.பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும்.
சிம்ம ராசி அன்பர்களே:எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக் கவும்.நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். மற்றவர்களிடம் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம்.
கன்னி ராசி காரர்களே: சிலருக்கு மனதில் இனம் தெரியாத சோர்வு உண்டாகலாம்.தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். உடல் நலனில் கவனம் தேவை. நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும்.வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள்.
துலாராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்று வீர்கள்.பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இன்று எடுக்க வேண்டாம்.புதிய முயற்சிகளை தள்ளி வைக்கவும் நல்லது.பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்
விருச்சிக ராசி நேயர்களே:குடும்பத்தி னரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும்.மாலை யில் உறவினர் ஒருவர் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது.பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். எதிரிகள் பணிந்து போவார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:சகோதர வகையில் எதிர்பார்க் கும் காரியம் முடிவதில் தாமதம் உண்டாகும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். காணாமல் போன முக்கிய ஆவணம் ஒன்று கிடைக்கும். பிள்ளைகளால் அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மகர ராசி காரர்களே:தாயின் உடல்நலனில் கவனம் தேவை.பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். சிலருக்கு சிறிய அளவில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டு சரியாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படக்கூடும் என்பதால், பொறு மையைக் கடைப்பிடிக்கவும்.
கும்ப ராசி உறவுகளே:தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள்.தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். காரியங்களில் வெற்றி உண்டாகும்.வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது நல்லது.எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒருவேலை முடியும்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.
மீன ராசி நேயர்களே:
மற்றவர்களு டன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகர மாக இருப்பார்கள்.சொந்த பந்தங்களின் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது அவ சியம். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும்.