இன்றைய ராசி பலன் – 15.11.2020
இன்றைய பஞ்சாங்கம், 15-11-2020, ஐப்பசி 30, ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை திதி பகல் 10.37 வரை பின்பு வளர்பிறை பிரதமை. விசாகம் நட்சத்திரம் மாலை 05.15 வரை பின்பு அனுஷம். நாள் முழுவதும் மரணயோகம். நேத்திரம் – 0. ஜீவன் – 0. கந்த சஷ்டி விரதம் ஆரம்பம். வாக்கியப்படி குரு பெயர்ச்சி இரவு 09.36 மணிக்கு. புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 –
மேஷ ராசி நேயர்களே:
11.58 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும்.கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடைவெளி ஏற்படலாம். பிள்ளைகளின் பிடிவாதம் சற்று கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பயணங்களின் போது கவனம் தேவை.
ரிஷப ராசி அன்பர்களே:
பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பிள்ளைகள் அறிவுத்திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். காரியங்கள் ஆதாயம் தருவதாக இருக்கும்.உத்யோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.
மிதுன ராசி காரர்களே:
தனிமையாக இருக்க நினைப்பீர்கள். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும்.பெண்களுக்கு உங்களது செயல்களில் மற்றவர் குறை காண நேரலாம். மாலையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கக்கூடும்.குடும்பத்தில் சந்தோஷம் உருவாகும். குடும்பத் தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும்.புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
கடக ராசி நேயர்களே:
உடன் பிறந்தவர்களால் வீண் பிரச்சினைகள் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.கணவன், மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு உருவாகும். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.
சிம்ம ராசி அன்பர்களே:
மனதில் சந்தோஷம் உண்டாகும்.எதிர்பாராத பண வரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும்.சகோதர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டி யிருக்கும்.தெளிவான முடிவுகள் எடுப்பதன் மூலம் இழுபறியான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்பட வாய்ப்பு ஏற்படும்.
கன்னி ராசி காரர்களே:
மனநிலையில் மாற்றம் இருக்கும். வாகனத்தில் செல்லும் போது கவனமாக இருக் கவும்.பிள்ளைகளால் நல்ல செய்திகள் வந்து சேரும். எதிர்பாராத வேலைச்சுமையின் காரணமாக சற்று சோர்வு உண்டாகும்.மனநிலையில் மாற்றம் இருக்கும். வியாபாரத்தில் விற் பனையும் லாபமும் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னையில் தெளிவான நிலை ஏற்படும்.
துலாராசி உறவுகளே:
நண்பர்கள் உறவினர்களிடம் சிறு மனத்தாங்கல்கள் வரலாம். உறவினர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும்.எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்து விடுவீர்கள். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
விருச்சிக ராசி நேயர்களே:
தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும்.தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.திர்பார்த்த அதிகாரம் அந்தஸ்து கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார்.எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். கணவனும் மனை வியும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.
தனுசு ராசி அன்பர்களே:
திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கி சாதகமான பலன் ஏற்படும். குடும்பத்தில் உங்கள் அலோசனைக்கு மிகுந்த முக்கியத்துவம் கிடைக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்களின் உதவியால் பணப்பற்றாக்குறை நீங்கும்.நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.
மகர ராசி காரர்களே:
உறவினர்கள் வழியில் சுப செய்தி வரும். பொறுப்புகளை நிறைவேற் றும் வகையில் சற்று அலைச்சல் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பெரிய மனிதர்களின் சந்திப்பால் நல்லது நடைபெறும்.
கும்ப ராசி உறவுகளே:
தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். முன்னேற்றத்திற்காக போட்ட திட்டங்கள் நிறைவேறும்.தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.குடும்பத்தில் இறுக்கமான சூழ்நிலை காணப்படும். நண்பர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் இருந்த இழுபறியான நிலை மாறும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும்.
மீன ராசி நேயர்களே:
பகல் 11.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கணவன் – மனைவிக்கி டையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும்.பணம் சம்பந்தமான கொடுக்கல் வாங்கலில் இடையூறுகள் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும்.மன கஷ்டமும், குழப்பமும் உண்டாகும்.