இன்றைய ராசி பலன் – 23.09.2021
இன்றைய பஞ்சாங்கம், 23-09-2021, புரட்டாசி 07, வியாழக்கிழமை, துதியை திதி காலை 06.54 வரை பின்பு தேய்பிறை திரிதியை. ரேவதி நட்சத்திரம் காலை 06.43 வரை பின்பு அஸ்வினி. சித்தயோகம் காலை 06.43 வரை பின்பு அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சுபமுகூர்த்த நாள். சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00.
மேஷ ராசி நேயர்களே:அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோவப்படுவீர்கள்.எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும்.பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் உண்டாகும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உடல்ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வதன் மூலமாக வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.
மிதுன ராசி காரர்களே:உறவினர் நண்பர்களால் அனுகூலம் உண்டு. முக்கியப் பிரமுகர் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பெற்றோரின் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். தந்தையாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.சுபகாரிய முயற்சிகளில் இருந்த இடையூறுகள் நீங்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே காணப்படும்.
கடக ராசி நேயர்களே:கொடுக்கல் வாங்கல் லாபகரமாக இருக்கும்.உறவினர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வாழ்க்கைத்துணையுடன் இணக்கமாக நடந்துகொள்வது அவ சியம்.பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்,பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு குழப் பங்கள் ஏற்பட்டு நீங்கும்.எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படும்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். சிலருக்கு அதிகரிக்கும் பணிச்சுமையின் காரணமாக உடல் அசதி ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும்.
கன்னி ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது.தேவையில்லாத மனக்கவலைகள் தோன்றும். பிற்பகலுக்கு மேல் அனைத்திலும் கூடுதல் கவனம் தேவை. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும்.குடும்பத்தில் அமைதி குறையும்.
துலாராசி உறவுகளே:சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனக்கசப்புகள் நீங்கும்.பணவரவு தாராளமாக இருப்பதால் வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.தந்தையிடம் எதிர் பார்த்த பணஉதவி கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல் நீங்கி குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கல்யாண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். நண்பர்கள் கேட் கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:உறவினர் நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தில் பெரியவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு வரும்.கண வன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் அதிகரிக்கும். மன உறுதியுடன் செயல்படுவீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். மற்றவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு இருப்ப தால், பேசும்போது பொறுமை அவசியம்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்துகொள்ளவும்.பிள்ளைகளை உயர்கல்விஉத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
மகர ராசி காரர்களே:சுபகாரியங்கள் கைகூடும்.பிள்ளைகள் கேட்பதை மறுப்பு சொல்லாமல் மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள். எதிர்பாராதசெலவுகள் வந்தாலும் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வந்து சமாளிப்பீர்கள். உங்கள் முயற் சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.
கும்ப ராசி உறவுகளே:விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எதுவும் இன்றைக்கு எடுக்க வேண் டாம்.சுபகாரிய முயற்சிகள் அனைத்திற்கும் நற்பலன் கிட்டும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வாக்கினால் பிரச்னை வரக்கூடும் என்ப தால் வார்த்தைகளில் நிதானம் தேவை. விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மீன ராசி நேயர்களே:
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.வாழ்க்கைத்துணை யால் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உண்டு.தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும்.சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.உத்தியோகஸ்தர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும்.