இன்றைய ராசி பலன் – 26.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 26-03-2021, பங்குனி 13, வெள்ளிக்கிழமை, துவாதசி திதி காலை 08.21 வரை பின்பு திரியோதசி திதி பின்இரவு 06.12 வரை பின்பு வளர்பிறை சதுர்த்தசி. மகம் நட்சத்திரம் இரவு 09.39 வரை பின்பு பூரம். மரணயோகம் இரவு 09.39 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். சிவ வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு வேலையில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும்.வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்று கொள்வீர்கள். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.
ரிஷப ராசி அன்பர்களே:கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை தரும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.
மிதுன ராசி காரர்களே:விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும்.பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிட்டும்.
கடக ராசி நேயர்களே:பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப லாபம் கிட்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். சகோ தரர்கள் உதவி கேட்டு வருவார்கள். மனதிற்கு புது தெம்பு கிடைக்கும். சிலருக்கு வீட்டில் தெய்வ வழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே: அரசு துறையில் பணிபுரிபவர்களுக்கு கௌரவ பதவிகள் கிட்டும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். அடுத்தவர்களை குறைக் கூறிக்கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது.குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம். திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.
கன்னி ராசி காரர்களே:திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். கூட்டாளிகள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிட்டும்.நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.நண்பர்களால் பிரசினைகள் வரக்கூடும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.
துலாராசி உறவுகளே:சுப காரியங்களுக்கான முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும்.நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவரை இப்போது சந்திக்க நேரிடும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு சற்று குறையும்.
விருச்சிக ராசி நேயர்களே:அதிகார பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும்.வாகனத்தை சீர் செய்வீர்கள். பணியாளர்களால் வியாபாரிகளுக்குச் சிறு சிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.உடனிருப்பவர்களால் அனுகூலங்கள் உண்டாகும்.
தனுசு ராசி அன்பர்களே:திடீர் பணம் வரவு உண்டு. வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். வீட்டு தேவைகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும்.தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும்.கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் கவனம் தேவை. தாயின் தேவையை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படும். கணவன் – மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும்.
மகர ராசி காரர்களே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்.அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர் பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.ஆரோக்கியத்தில் சற்று மந்த நிலை ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.வேலைகளை இழுத்து போட்டுப் பார்க்க வேண்டி வரும். தாய்வழி உறவினர்களால் சங்கடங்கள் உண்டாகும்.
கும்ப ராசி உறவுகளே:மனைவி வழியில் ஆதரவு கிடைக்கும். தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.சுபகாரிய முயற்சிகளில் இருந்த தடைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.தாயின் உடல்நலனில் கவனம் தேவை.திடீர் என்று நல்ல செய்தி வரும்.
மீன ராசி நேயர்களே:
சொந்த பிரச்சினையில் ஒன்று தீரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். வியாபாரிகளுக்குப் பணவரவும் லாபமும் அதிகரிக்கும் நாள்.நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நடுவார்கள். நண்பர்களின் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.