இன்றைய ராசி பலன் – 26.06.2020
இன்றைய பஞ்சாங்கம், 26-06-2020, ஆனி 12, வெள்ளிக்கிழமை, பஞ்சமி திதி காலை 07.03 வரை பின்பு வளர்பிறை சஷ்டி திதி பின்இரவு 05.04 வரை பின்பு வளர்பிறை சப்தமி. மகம் நட்சத்திரம் பகல் 11.25 வரை பின்பு பூரம். மரண யோகம் பகல் 11.25 வரை பின்பு சித்த யோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கௌரி விரதம். சஷ்டி விரதம். முருக வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.இராகு காலம் – பகல் 10.30-12.00, எம கண்டம்- மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் – காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00
மேஷ ராசி நேயர்களே:
பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். வேற்றுமதத்தவர் உதவுவார். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும். மனதில் பட்டதைபளிச் சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகாதீர்கள்..
ரிஷப ராசி அன்பர்களே:
தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும்.
பிள்ளைகளால் ஆறுதல் கிடைக்கும். குடும்பத்தில் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள்.சகோதரர்களால் சங்கடம் ஏற்படக்கூடும்.
மிதுன ராசி காரர்களே:
அரசால் ஆதாயம் உண்டு, செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் மகிழ்ச்சியான செலவாகவே இருக்கும்.வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களிடம் எதிர்பார்த்த செய்தி கிடைக்கும்.வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள்.
கடக ராசி நேயர்களே:
எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.உறவினர்கள் வகையில் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிக்க வேண்டும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை.தாயின் உடல் நலனில் கவனம் தேவை. வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். முருகப்பெருமானை வழிபட சிரமங்கள் குறையும்.
சிம்ம ராசி அன்பர்களே:
நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.பணவரவு தாராளமாக இருக்கும்.குடும்பத்தில் பிள்ளைகள் அன்புடன் நடந்து கொள்வார்கள்.
கன்னி ராசி காரர்களே:
தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும்.யாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவுமிருக்காது.உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.
துலாராசி உறவுகளே:
சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். வியாபாரத்தில் நவீன யுக்திகளை கையாளுவீர்கள்.உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும்.
விருச்சிக ராசி நேயர்களே:
சகோதர வகையில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் சந்திப்பில் சந்தோஷம் கூடும். உங்களின் நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் வரும்.பிற்பகலுக்குமேல் புதிய முயற்சி சாதகமாக முடியும்.உத்தியோகத்தில் வேலைபளு குறையும்.
தனுசு ராசி அன்பர்களே:
பிரச்சினைகளுக்கு எதார்த்தமான முடிவுகள் எடுப்பீர்கள். தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும். மனதில் பட்டதைபளிச் சென்று பேசி மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாகாதீர்கள்,மற்றவர்களுடன் வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.அனுசரித்து செல்வது நல்லது.
மகர ராசி காரர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கி தவிப்பீர்கள். மற்றவர்களுக்காக பரிந்து பேசி சிக்கி கொள்ளாதீர்கள். வழக்கமான பணிகளிலும் மிகுந்த கவனத்துடன் ஈடுபடவும்.உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மற்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடவேண்டாம்
கும்ப ராசி உறவுகளே:
புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்று கொள்வார்கள், தந்தை வழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள்.சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
மீன ராசி நேயர்களே:
குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு ஏற்ற நாள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் பெண்களால் சந்தோஷம் உண்டாகும். தாயின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் பாராட்டப்படும்.