இன்றைய ராசி பலன் 27.04.2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.27-04-2019, சித்திரை 14, சனிக்கிழமை, அஷ்டமி திதி மாலை 05.01 வரை பின்பு தேய்பிறை நவமி. திருவோணம் நட்சத்திரம் இரவு 02.12 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஹயக்ரீவர் – கால பைரவர் வழிபாடு நல்லது. ஸ்ரீ நடராஜர் அபிஷேகம். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.
இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷராசி நேயர்களே:உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள்.ஆன்மீக காரியங்கள் செய்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும்.உங்கள் மீதிருந்த பழிச்சொற்கள் நீங்கும்.பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.
ரிஷப ராசி காரர்களே:குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகரிக்கும்.சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவி வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். சிலருக்குக் குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
மிதுனராசி காரர்களே:குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள்.குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனசங்கடங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள்.ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
கடகராசி நேயர்களே:தாயாரின் உடல் நிலை சீராகும்.மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படக்கூடும்.
சிம்மராசி அன்பர்களே:டும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள்.பிள்ளைகள் பொறுப்புடன் இருப்பார்கள். உத்தியோகத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.. பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கன்னி ராசி காரர்களே:பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அரவணைத்துச் செல்வது அவசியம். குடும்பத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படும்.அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். திருமண சுபமுயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம்.
துலாராசி உறவுகளே:இதுவரை இருந்த குழப்பங்கள் பிரச்சினைகள் எல்லாம் படிப்படியாக குறையும்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமை அவசியம். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு.மகான்களின் தரிசனமும் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும்.
விருச்சிகராசி நேயர்களே:குடும்பத்தில் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.வேலையில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.தாய்வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியம் முடிப்பீர்கள்.
தனுசுராசி அன்பர்களே:தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். சொந்த-பந்தங்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். தொழில் முன்னேற்றத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும்.
மகரராசி காரர்களே:பூர்வீக சொத்துகளால் நல்ல அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும்.ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச் சோர்வு வந்து நீங்கும்.மற்றவர்களிடம் விவாதம் செய்வதை தவிர்ப்பது முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
கும்பராசி உறவுகளே:தாயின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். ஆனால், உடல் நலனில் கவனம் தேவை.யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரங்களால் சங்கடங்கள் வரும். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும்.சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பண பற்றாக்குறையை தவிர்க்கலாம்.
மீனராசி நேயர்களே:சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும்.கல்யாண முயற்சிகள் பலிதமாகும். எங்குச் சென்றாலும் நல்ல வரவேற்பு கிடைக்கும், குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”