இலங்கையில் நேற்று இரவு இடம்பெற்ற தீவிர வாத தாக்குதலில் இரண்டு பெண்கள் உட்பட 15 பேர் பலி.? !
ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் நடந்த கொடூர தற்கொலை தாக்குதலை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் தேடுதல் வேட்டையில் பொலீஸாரும் விஷேட அதிரடி படையினரும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய தினம் கல்முனை சாய்ந்தமருது பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான செயற்பாடுகள் நடப்பகாக பொலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்தை பொலீஸார் சுற்றி வளைத்த போது
பொலீஸார் மீது குண்டு தாக்குதல் நடத்தியதுடன் துப்பாக்கி பிரயோகமும் இடம்பெற்றது. பதில் துப்பாக்கி பிரயோகம் பொலீஸார் நடத்தினர். 7.30 மணியில் இருந்து 10.30 மணிவரை குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றதாக கூறப் படுகிறது. இந்த சம்பவத்தில் பொது மக்கள் சிலர் காயமடைந்ததுடன் ஒருவர் உயிர் இழந்துள்ளதாகவும் தீவிர வாதிகள் 2 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில்
4 தீவிரவாதிகள் உட்பட பொதுமக்களில் ஒருவர் என 15 பேர் உயிர் இழந்துள்ளதாகவும் இதில் இருவர் பெண்கள் எனவும் உறுதிபடுத்தப் படாத தகவல்கள் தெரிவிகின்றன. இந்த தாக்குதலின் பின் தேசிய தெளஹீத் ஜமாத்தின் தலைவர் சஹ்ரானின் தம்பி நியாஸ் இருப்பதாக சந்தேகம் வெளியாகி உள்ளது.!
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”