இன்றைய ராசி பலன் – 28.03.2021
இன்றைய பஞ்சாங்கம், 28-03-2021, பங்குனி 15, ஞாயிற்றுக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 12.18 வரை பின்பு தேய்பிறை பிரதமை. உத்திரம் நட்சத்திரம் மாலை 05.35 வரை பின்பு அஸ்தம். அமிர்தயோகம் மாலை 05.35 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். பங்குனி உத்திரம். கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷ ராசி நேயர்களே:விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும்.மாலையில் குடும்பத்துடன் வீட்டில் தெய்வ வழிபாடு செய்வீர்கள்.ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும்.அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பிள்ளைகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது.திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். வீட்டில் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள்.
மிதுன ராசி காரர்களே:வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதைக் கண்டிப்பாகத் தவிர்த்துவிடவும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வெளியில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும்.
கடக ராசி நேயர்களே:பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.உடன் பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். தந்தையின் தேவையை பூர்த்தி செய் வீர்கள்.வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் ஏற்படும்.
சிம்ம ராசி அன்பர்களே:குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும் விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக் கும்.பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். கடன்கள் விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
கன்னி ராசி காரர்களே:வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம்.தாயின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும்.உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.
துலாராசி உறவுகளே: பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். நண்பர்களுக்காக செலவு செய்ய வேண்டி வரும்.பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். தந்தையுடன் விவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.பெற்றோர் பக்கபலமாக இருப்பார்கள்.
தனுசு ராசி அன்பர்களே:வெளியூர் பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்வீர்கள்.புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள்.வியாபாரிகள், புதிய திட்டங்களைச் செயல்படுத்த முயல்வீர்கள்.பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.
மகர ராசி காரர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.தாய்வழிஉறவினர்களால் செலவுகள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த மணப்போர் நீங்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அவர்கள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கித் தருவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கித் தவிப்பீர்கள்.பணியாளர்களால் சில பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது.
மீன ராசி நேயர்களே:
தாயாரின் உடல் நிலை சீராகும்.சகோதரர் கேட்கும் உதவி யை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள்.வெளியூர் பயணங்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பணவரவும் பொருள்சேர்க்கையும் ஏற்படும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும்.