இன்றைய ராசி பலன் 28.04.2019
புரட்சி நேயர்களுக்கு அன்பான வணக்கம் …இன்றைய நாள் உங்கள் அனைவருக்கும் சிறப்பான நாளாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிராத்தித்து இன்றைய நாள் பற்றியும் 12 ராசிக்கான பலன்களையும் பார்க்கலாம்.28-04-2019, சித்திரை 15, ஞாயிற்றுக்கிழமை, நவமி திதி இரவு 07.34 வரை பின்பு தேய்பிறை தசமி. அவிட்டம் நட்சத்திரம் பின்இரவு 05.17 வரை பின்பு சதயம். மரணயோகம் பின்இரவு 05.17 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கரி நாள். புதியமுயற்சிகளையும் பயணங்களையும் தவிர்க்கவும்.
இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00,
மேஷராசி நேயர்களே:வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். அவர் மூலம் உங்களுக்குத் தேவையான உதவிகளும் கிடைக்கும்.பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள்.
ரிஷபராசி அன்பர்களே:எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். மாலையில் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய டிசைனில் ஆடைகள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.
மிதுனராசி காரர்களே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.மாலை மணி 5 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் சற்று இறுக்கமான சூழ்நிலையே காணப்படும். முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பிறகு மேற்கொள்வது உத்தமம்.
கடகராசி நேயர்களே: கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு.உங்கள் தேவையை அறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். அலுவலகப் பணிகளில் சில குழப்பங்கள் ஏற்படக்கூடும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் கால தாமதமாகும்.
சிம்மராசி அன்பர்களே:பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு.சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள்.அலுவலகத்தில் சக ஊழியர்களால் ஏற்பட்ட அவப்பெயர் நீங்கும். குடும்பத்தில் சுப செலவுகள் தோன்றும்.
கன்னி ராசி காரர்களே:புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும்.சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும்.வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.
துலாராசி உறவுகளே:உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுக்கும் முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும்.மகளுக்கு நல்ல வரன் அமையும்.அனைத்து விஷயங்களிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும்.
விருச்சிகராசி நேயர்களே:திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள்.மகான்களை தரிசித்து ஆசி பெறும் வாய்ப்பு ஏற்படும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
தனுசுராசி அன்பர்களே:நீண்டநாள்களாக எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும்.தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன், அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம்.
மகரராசி காரர்களே: பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.சிலருக்கு திடீர் பணவரவுக்கும், திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு. மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள்.டும்ப விஷயமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரும்.
கும்பராசி உறவுகளே:எதிரிகள் வகையில் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள்.வீண் அபவாதம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.புதிய முயற்சிகளையும் பயணம் மேற்கொள் வதையும் தவிர்க்கவும்.
மீனராசி நேயர்களே:வேற்று மதத்தவர் அறிமுகமாவார்.சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள்.மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படும் என்ப தால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிரசித்தி பெற்ற கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.
நம் செய்திகள் பிடித்தால் , இங்கே உள்ள பேஸ்புக் பட்டனில் க்ளிக் செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிரலாமே. உங்கள் ஆதரவை நமது இந்தச் சேவைக்கும் வழங்கலாமே!!
”புரட்சி வானொலி தனக்கென்று தனித்துவமான முறையில் செய்திகளை வழங்கி வருகின்றது. இங்கே உங்களிற்கு சங்கடமான / இடையூறான பதிவுகள் இருந்தால் அறியத் தாருங்கள். பரிசீலனை செய்யக் காத்திருக்கிறோம். புரிந்துணர்வுடன் தொடரும் தங்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி!! புரட்சி வானொலியின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது. அனுமதியின்றி நகல் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. The Puradsi FM is giving you unique information. Please let us know if there are any unpleasant / obsolete recordings. They will be deleted! All of the Puradsi FM records are patented. Duplicate without permission is prohibited.”