இன்றைய ராசி பலன் – 29.08.2021
இன்றைய பஞ்சாங்கம், 29-08-2021, ஆவணி 13, ஞாயிற்றுக்கிழமை, சப்தமி திதி இரவு 11.25 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. நாள் முழுவதும் கிருத்திகை நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. கிருத்தகை விரதம். முருக வழிபாடு நல்லது. இராகு காலம் – மாலை 04.30 – 06.00, எம கண்டம் – பகல் 12.00 – 01.30, குளிகன் – பிற்பகல் 03.00 – 04.30, சுப ஹோரைகள் – காலை 7.00 – 9.00, பகல் 11.00 – 12.00 , மதியம் 02.00 – 04.00, மாலை 06.00 – 07.00, இரவு 09.00 – 11.00.
மேஷ ராசி நேயர்களே:நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.திருமண பேச்சுவார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்ப விஷயமாக சிறு பயணம் மேற்கொள்ள நேரிடும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள்.பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வரவும் செலவும் சமமாகவே இருக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும்.
ரிஷப ராசி அன்பர்களே:பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள்.வாழ்க்கைத் துணைவர் வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும்.பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.உத்தியோகத்தில் விமர்சனங்களை தாண்டி முன்னேறுவீர்கள்.அதிகரிக்கும் செலவுகளால் கையிருப்பு குறையும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே:ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். சகோதர வகையில் சுபச்செலவுகள் ஏற்படக் கூடும்.சுபகாரிய முயற்சிகளில் தடை தாமதங்கள் ஏற்படலாம். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.வீட்டில் பெண்களின் பணிச்சுமை சற்று குறையும்.
கடக ராசி நேயர்களே:பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். உறவினர்கள் மூலம் கேட்கும் செய்தி சிறிது சங்கடத்தைத் தரக்கூடும்.பெற்றோரிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.
கன்னி ராசி காரர்களே:புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் முடிவதில் தாமதம் ஏற்படும்.ராசிக்கு காலை 10.20 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.சுப முயற்சிகளையும், பயணங்களையும் மாலை நேரத்தில் மேற்கொள்வது நல்லது.
துலாராசி உறவுகளே:ராசிக்கு காலை 10.20 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும்.முன்கோபத்தை குறையுங்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் இணக்கமாக நடந்து கொள்வது நல்லது.எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். தாய்மாமன் வழியில் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப் பாருங்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிக ராசி நேயர்களே:தாயாரின் உடல் நிலை சீராகும்.காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும்.வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன்- மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். பிள்ளைகள் பிடிவாதமாக நடந்துகொள்வார்கள்,விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.
தனுசு ராசி அன்பர்களே:அதிகாலையிலே ஆனந்தமான செய்திகள் வந்து சேரும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதித்தாலும் உடனே சரியாகிவிடும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். மனதுக்கு உற்சாகம் தரும் செய்தி கிடைக்கும்.பெரியோர்களால் அனுகூலம் உண்டாகும்.
மகர ராசி காரர்களே:எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.உங்களைச் சுற்றி இருப்பவர்களில் நல்லவர்கள்யார் என்பதை கண்டறிவீர்கள். சிலருக்குத் தாய்வழி உறவினர்களால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள். மாலையில் நண்பர்கள் மூலம் கேட்கும் செய்தி உங்களை உற்சாகப்படுத்தும்.உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறும்.சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள்.நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை தரும்.
மீன ராசி நேயர்களே:
விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும்.உறவினர்கள் வகையில் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும்.பழைய நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். கம்பீரமாகப் பேசி சில காரியங்களை சாதிப்பீர்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.