இன்றைய ராசி பலன் – 29.12.2020
இன்றைய பஞ்சாங்கம், 29-12-2020, மார்கழி 14, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை சதுர்த்தசி திதி காலை 07.55 வரை பின்பு பௌர்ணமி. மிருகசீரிஷம் நட்சத்திரம் மாலை 05.32 வரை பின்பு திருவாதிரை. சித்தயோகம் மாலை 05.32 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பௌர்ணமி விரதம். ஸ்ரீ நடராஜர் அபிஷேகம்.
இராகு காலம் மதியம் 03.00-04.30, எம கண்டம் காலை 09.00-10.30, குளிகன் மதியம் 12.00-1.30, சுப ஹோரைகள் காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.
மேஷ ராசி நேயர்களே:
திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சிலருக்கு இளைய சகோ தரரால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
ரிஷப ராசி அன்பர்களே:
செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். நண்பர்கள் வகையில் திடீர் செலவுகள் ஏற்படக்கூடும்.உடல் நிலையில் கவனம் தேவை. மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.
மிதுன ராசி காரர்களே:
ஆடம்பர பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப் பிடிக்கவும்.விருந்தினர்களின் வருகை உண்டு. உத்தியோகத்தில் மற்றவர்களின் குறைகளில் கவனம் செலுத்த வேண்டாம். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபட்டு மனம் ஆனந்தம் அடைவீர்கள்.
கடக ராசி நேயர்களே:
அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். புதிய நண்பர்களின் அறிமுகமும் அவர் களால் ஆதாயமும் கிடைக்கும்.வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். உறவினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். வியாபாரத்தில் விற்ப னையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே:
பூர்வீக சொத்துக்கள் வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சகோதரர்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும்.
கன்னி ராசி காரர்களே:
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். மாலையில் குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள்.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
துலாராசி உறவுகளே:
சுப செலவுகளால் கையிருப்பு குறையும். மறைமுக எதிர்ப்பு நீங்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும்.
விருச்சிக ராசி நேயர்களே:
ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளுக்காக பாடுபட வேண்டி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள்.எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் நேரிடும். உடல் நிலையில் கவனம் தேவை.வேலைச்சுமையால் சோர்வு அடைவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்வது ஆறுதல் தரும்.
தனுசு ராசி அன்பர்களே:
பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும்.உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றலாம்.
மகர ராசி காரர்களே:
பிள்ளைகளால் ஏற்பட்ட மனகஷ்டங்கள் குறையும். மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும்.கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி வகை பிறக்கும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும்.நீண்ட நாட்களாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த இடத்திற்கு சென்று வருவீர்கள். பொறுமையாக இருப்பது அவசியம்.
கும்ப ராசி உறவுகளே:
வேலையில் பணியாட்கள் தம் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாழ்க் கைத்துணைவழி உறவினர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தினருடன் ஒற்றுமை குறையும். தாயின் விருப்பத்தை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும்.
மீன ராசி நேயர்களே:
எடுக்கும் காரியங்கள் பாதியில் தடைபடலாம். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும்.வெளிப் பயணங்களில் கவனம் தேவை.தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக் கூடும்.