இன்றைய ராசி பலன்! 13.01.2020
இன்றைய பஞ்சாங்கம்:13-01-2020, மார்கழி 28, திங்கட்கிழமை, திரிதியை திதி மாலை 05.32 வரை பின்பு தேய்பிறை சதுர்த்தி. ஆயில்யம் நட்சத்திரம் காலை 09.55 வரை பின்பு மகம். சித்தயோகம் காலை 09.55 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சங்கடஹர சதுர்த்தி. விநாயகர் வழிபாடு நல்லது.
இராகு காலம்- காலை 07.30 – 09.00, எம கண்டம்- 10.30 – 12.00, குளிகன்- மதியம் 01.30-03.00, சுப ஹோரைகள்- மதியம்12.00-01.00, மதியம்3.00-4.00, மாலை06.00 -08.00, இரவு 10.00-11.00.
மேஷ ராசி நேயர்களே:
ஆடம்பரச் செலவுகளைக்குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே சிறிய அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும்.குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும்.
ரிஷப ராசி அன்பர்களே:
தாயாரின் உடல் நலத்தில்கவனம் தேவை. வாழ்க்கைத் துணையின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்ச்சி அடைவீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் செலவுகளும் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
மிதுன ராசி காரர்களே:
உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும்.அண்டை அயலாரின் அன்பு தொல்லை குறையும். வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். சிலருக்கு எதிர் பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு
கடக ராசி நேயர்களே:
வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சிலருக்குக் குடும் பத்துடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும்.சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே:
: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில நேரங்களில் மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும்.முக்கியமான விஷயம் தொடர்பாக வாழ்க்கைத்துணையிடம் ஆலோ சனை கேட்பீர் கள். சிலருக்கு தாய்மாமன் வகையில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் காலதாமதமின்றி கிடைக்கும்.
கன்னி ராசி காரர்களே:
குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற மனஸ்தாபம் தோன்றும். சிலருக்கு உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.அனாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். உத்தியோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி இருக்கும்.
துலாராசி உறவுகளே:
பிரபலங்களால் ஆதாயம் உண்டு. சகோதரர்கள் உதவி கேட்டு நச்சரிப்பார்கள்.நண்பர்கள் உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த கடனில் ஒரு பகுதி திரும்பக் கிடைக்கும்.திருமண பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த சுபச் செய்தி இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.
விருச்சிக ராசி நேயர்களே:
உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். . சிலருக்கு வெளியூரில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். பணவரவு சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி அன்பர்களே:
காலை 09.55 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையாக இருப்பது நல்லது.வீண்விவாதம் செய்வ தைத் தவிர்க்கவும். மதியத்திற்கு பிறகு குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும்.வியாபாரத்தில் தள்ளிப்போன ஒப்பந்தம் கையெழுத்தாகும்.வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும்.
மகர ராசி காரர்களே:
சந்திராஷ்டமம் காலை 09.55 முதல் இருப்பதால் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும்.செயல்களில் நிதானத்துடன் செயல்பட வேண்டும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை விட்டுப்பிடித்துச் செல்வது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.
கும்ப ராசி உறவுகளே:
உடல் ஆரோக்கியம் மேம்படும்.மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. புதிய முயற்சி சாதகமாக முடியும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். ஊழியர்களால் ஏற்பட்ட மறைமுக இடையூறுகள் நீங்கி, நிம்மதி பிறக்கும்.வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள்.
மீன ராசி நேயர்களே:
தொடங்கும் புதிய முயற்சி சாதகமாக முடியும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிக ரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அவ்வப்போது தேவையற்ற குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.