பயணிகளுக்கு வந்த திடீர் நோய்; அவசரமாகத் தரையிறங்கிய விமானம்!
சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேஷியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று, இன்று அதிகாலை கொழும்பு பண்டார நாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்துக்குச் சொந்தமான தாய் லயன் எயார் விமானத்தில், சவுதி அரேபியாவிலிருந்து இந்தோனேசியாவுக்குப் பயணித்த இருவருக்குச் சுகயீனம் காரணமாகவே இந்த விமானம் தரையிறக்கப்பட்டது.
எனினும், விமானம் தரையிறங்க முன்னரே குறித்த இருவரும் இறந்துவிட்டனர். இந்தோனேசியாவைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவரும் 64 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு இறந்தவர்களாவர்.
இருவரின் உடல்களும் கொழும்பிலுள்ள இந்தோனேசியத் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.