இன்றைய ராசி பலன்! 17.08.2019
இன்றைய பஞ்சாங்கம், 17-08-2019, ஆடி 32, சனிக்கிழமை, துதியை திதி இரவு 10.48 வரை பின்பு தேய்பிறை திரிதியை. சதயம் நட்சத்திரம் பகல் 01.55 வரை பின்பு பூரட்டாதி. அமிர்தயோகம் பகல் 01.55 வரை பின்பு மரணயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. சனிப்ரீதி நல்லது. இராகு காலம் – காலை 09.00-10.30, எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் – காலை 07.00-08.00, பகல் 10.30-12.00, மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.
மேஷ ராசி நேயர்களே: கணவன் – மனைவிக்கிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற்போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கூட்டாளிகள் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள்.அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும்.
ரிஷப ராசி அன்பர்களே: வீடு வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் நல்ல முடிவுக்கு வரும்.முக்கியப் பிரமுகர்களின் தொடர்பும், அதனால் அனுகூலமும் உண்டாகும்.
மிதுன ராசி காரர்களே: புதிய சிந்தனைகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிலருக்குக் குடும்ப விஷயமாக திடீர்ப் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரிடும். விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள்.
கடக ராசி நேயர்களே:சந்திராஷ்டமம் நீடிப்பதால் தேவையில்லாத டென்ஷன் உண்டாகும். சிலருக்குக் குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும்.சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள்.
சிம்ம ராசி அன்பர்களே: பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சி சாதகமாக முடியும். தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர் கள்.திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி காரர்களே:நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள்.மனதில் அடிக்கடி குழப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.
துலாராசி உறவுகளே: உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். சிலருக்கு வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.. வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும்.
விருச்சிக ராசி நேயர்களே:புதிய முயற்சி எதையும் மேற்கொள்ளவேண்டாம்.பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும். பிள்ளைகளால் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.
தனுசு ராசி அன்பர்களே: சொந்த-பந்தங்களின் சுய ரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள்.உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும், ஆடை, ஆபரண சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சிகள் நிகழும்.
மகர ராசி காரர்களே: விஷேங்களை முன்னின்று நடத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசாங்க அதிகாரிகளின் அறிமுகமும், அவர்களால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.கணவன் – மனைவிக்கிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் வளர்ச்சி அடைவீர்கள்.
கும்ப ராசி உறவுகளே:பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படக்கூடும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும்.
மீன ராசி நேயர்களே: மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள்.உடல்நிலையில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.
45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா?
Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்
IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.