“எங்களிடம் மறைத்து பிக் பாஸுக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் பிக் பாஸ் ராஜு” நடிகை வைஷ்னவி பேட்டி.!!
பிக் பாஸுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றியுள்ளார் ராஜு என நாம் இருவர் சீரியலில் கடைசி தங்கையாக நடித்துவரும் வைஷ்ணவி தெரிவித்துள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களின் மனதை கவர்ந்த சீரியலாக இருப்பது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல். நட்சத்திர பட்டாளமே நடிக்கும் இந்த சீரியலில் மருமகனாக நடித்து வருபவர் நடிகர் ராஜு.
மாயனின் நண்பனாகவும், மாயனின் தங்கையின் கணவனாகவும் நடித்து வந்த ராஜு திடீரென பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் நடித்த சீரியலில் ராஜு காணாமல் போய்விட தேடும் படலமாக கதை அமைந்துள்ளது. பிக் பாஸ் வீட்டில் அனைவரையும் சமாளிப்பவராகவும், ரசிகர்களுக்கு பிடித்தவராகவும் நடந்துகொள்ளும் ராஜு பற்றி சீரியலில் ராஜுவின் மனைவியின் தங்கையாக நடிக்கும் வைஸ்னவி பகிர்ந்துள்ளார்.
ராஜு அண்ணா இருந்தால் அந்த இடமே கலை கட்டும்,ராஜு அண்ணா எப்போதும் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பவர், அதனை அவர் மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளார். அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு 15 நாட்களுக்கு முன்பு வரை எங்களுடன் இருந்தார் ஷூடிங்கில் கலந்து கொண்டார். ஒன்றாக சாப்பிட்டு ஒன்றாக பேசி தான் இருந்தோம்.
ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வது பற்றி அவர் பேசவே இல்லை. அவர் தனிமை அடுத்தப் பட்டது தெரிய வந்தது, அது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு தான் என்று கூட யாருக்கும் தெரியாமல் இருந்தது. பிக் பாஸ் வீட்டில் அவரை பார்த்ததும் ஷாக்காகி விட்டோம்.
இவ்வளவு நாட்கள் எங்களோடு பழகியும் எங்களிடம் சொல்லவில்லையே என்ற கவலை இருந்தது, ஆனால் சொல்லக் கூடாது என பிக் பாஸ் டீம் கூறி இருந்ததால் அவர் வாய் திறக்கவில்லை. நேர்மையாக விளையாடும் ராஜு அண்ணா வெற்றி பெற்றால் மகிழ்ச்சி என அவர் மேலும் கூறியுள்ளார்.!!