நடிகை வனிதா மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு..! அதிரடியாக கைது செய்யப் பட போகிறாரா..?
வனிதா பீட்டர் பால் மீது இதுவரை எலிசபெத் ஹெலன், லக்ஷ்மி இராமகிருஷ்ணன், ஆகியோர் ஏற்கனவே பொலீஸார் புகார் அளித்திருந்தாலும் சட்ட ரீதியாக அனைத்தும் வனிதா சரியாக செய்திருந்ததால் வனிதா மீது பொலீஸார் வழக்கு பதியாத நிலையில் வனிதாவின் திருமணம் முடிந்து ஒரு மாதத்தின் பின் ஊரடங்கு உத்தரவை மீறி வனிதா திருமணம் செய்ததாக வனிதா வசித்து வரும் அடுக்குமாடி குடியிருப்பின் மக்கள் நலச் சங்க நிர்வாகி நிஷா எஸ்ஆர்எம்சி பொலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப் பட்டிருந்த நிலையில் அதனை மீறி வனிதா தனது நண்பர்களுடன் திருமண நிகழ்வை வனிதா செய்திருந்ததாகவும் இதனால் குடியிருப்பில் தொற்று நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாகவும் குறித்த புகாரில் குறிப்பிட்டிருந்த நிலையில்,
வனிதா மீது நோய் தொற்று காலத்தில் பொது முடக்கத்தை மீறிய குற்றத்திற்காக வனிதா மீது நடவடிக்கை எடுக்கும் படி குறிப்பிட்டிருந்தார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட பொலீஸார் 144 தடை சட்டத்தை மீறுதல், தொற்று நோய் பரவுவதற்கு காரமாக இருதல் உட்பட 3 சட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வனிதா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனை பார்த்த சிலர் வனிதாவின் திருமணத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்தால் கூட இந்நேரம் குணமாகி இருக்கும் இப்போது போய் புகார் அளிக்கிறீர்கள் என கிண்டலடித்து வருகின்றனர்…!