சிரியாவில் கோர விபத்து..! 32 பேர் உயிரிழப்பு..!!
சிரியாவில் தலைநகர் டமாஸ்கஸ்ஸிலுள்ள நெடுஞ்சாலை ஒன்றில் கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்துடன் 77 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எரிபொருள் ஏற்றிச்சென்ற பாரவூர்தியும், பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து ஏற்பட்ட போது அந்த வழியில் பயணித்த மேலும் மூன்று வாகனங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.