மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த 37 வயது பெண் ! அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!!
தொலைபேசியை பார்த்த படி 100 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் இருந்து நடந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பெண் ஒருவர் மலையிலிருந்து தவறி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பாலோஸ் வெர்டெஸ் என்ற பகுதியில் 100 அடி உயரம் கொண்ட மலை ஒன்று உள்ளது. அந்த மலையில் 32 வயதுடைய பெண் ஒருவர் எறியுள்ளார். மலையின் உச்சியை அடைந்த பெண் அங்கு தனது தொலைபேசியை பார்த்த படியே நடந்து கொண்டிருந்தார். அப்போது உள்ளூர் நேரப்படி இரவு 7 மணியளவில் சற்றும் எதிர்பாராதவிதமாக அந்த பெண் மலையிலிருந்து தவறி விழுந்தார். அதில் அவர் மலை அடிவாரத்திலிருந்த பாறைகளுக்கு இடையே சிக்கிக்கொண்டார்.
இரவு வேளை என்பதனால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லை. இதனால் இரவு முழுவதும் அந்த பெண் பாறைகளுக்கு இடையே சிக்கி தவித்தார். மறுநாள் காலை உள்ளூர் நேரப்படி 8 மணிக்கு அந்த வழியாக வந்த மலை ஏறும் வீரர் ஒருவர் மலை அடிவாரத்தில் பெண் சிக்கியிருப்பதை கண்டு உடனே மீட்பு குழுவினருக்கு தகவல் வழங்கியுள்ளார். அவர் வழங்கிய தகவலுக்கு அமைய ஹெலிகொப்டரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர், நீண்ட நேரம் போராட்டத்தின் பின் பாறைகளுக்கு இடையில் சிக்கியிருந்த பெண்ணை கவனமாக மீட்டனர். அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.