கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை…!! கண்ணாடியறையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சோகம்..!
சீனாவில் கோர தாண்டவமாடும் கொரோனா வைரஸினால் சீனாவில் மட்டும் இதுவரையில் 259 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 11,791 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தற்போது இந்தியா உட்பட 15-க்கும் அதிகமான நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் உலக மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் இந்த நிலையில், கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒன்னும் அறியாத பச்சிளம் குழந்தை ஒன்று கண்ணாடி அறைக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றமை பார்போரை கண்கலங்கச் செய்கின்றது.
இந்த குழந்தை, அக்கண்ணாடி அறையில் இருந்தவாறு வெளியே இருக்கும் வைத்தியரை பார்த்து கையசைத்து, ஏதோ கூற முன்வருகின்றது. அதைக் கண்ட அந்த வைத்தியர் கண்கலங்கி நிற்பது பெரிதும் வேதனைக்குரிய விடயமாக விளங்குகின்றது.