8 மாத ழந்தையை கொடூரமாக கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன தெரியுமா?
பெலாரஸ் நாட்டை சேர்ந்தச் 26 வயதுடைய நடாலியா கோல்ப் என்ற தாய் தனது கணவர் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து பக்கத்து வீட்டு நபரான 48 வயதுடைய விக்டர் சியார்ஹெல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
உச்சம் தலைக்கு போதை ஏறியதால் அழுது கொண்டிருந்த நடாலியாவின் 8 மாத குழந்தை ஹன்னாவை விக்டர் கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் குழந்தையின் தலையை துண்டாக்கி கொலை செய்துள்ளார். அதற்கு இடையில் தனது மற்ற இரண்டு மகள்களுடன் வெளியில் சென்றிருந்த லியோனிட் திரும்பி வந்ததும், குழந்தை இரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதாக பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இது தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட விக்டருக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனையும், நடால்யாவிற்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதித்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த நிலையில் இருவரின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கிழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து அறிவித்தது. ஐரோப்பிய நாடுகளில் மரண தண்டனையை அனுமதிக்கும் ஒரே நாடான பெலாரஸில், 1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியுடன் நாடு சுதந்திரமானதிலிருந்து 400 க்கும் மேற்பட்ட ஆண்கள் மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.