லண்டனில் தீவிரவாத தாக்குதல் நடத்திய கும்பல் சுடேஸ் அமானுக்கு இலங்கையுடன் தொடர்பு?
லண்டனில் ஆட்டம் காணும் தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட சுடேஸ் அமானின் பெற்றோர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. Dailymail வெளிவந்த செய்தியில் குறித்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது. லண்டனில் கத்தி குத்து தாக்குதலை நடத்திய சுடேஸ் அமான் பொலிஸாரினால் சுட்டுகொல்லப்பட்டார்.
மேலும் இந்த நிலையில் Dailymaiயில் வெளிவந்த செய்தியில் சுடேஸ் அமான் தொடர்ப்பாக இவ்வாறு கூறப்பட்டுள்ளது. “லண்டனின் ஹரோவில் தனது தாய் மற்றும் நான்கு சகோதரர்களுடன் வாழ்ந்த வந்த வேளையில் தனது 17 வயதில் சுடேஸ் அமான் முதன் முதலில் பயங்கரவாத குற்றங்களில் ஈடுபட ஆரம்பித்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவரது நடவடிக்கைகளை அறிந்த பொலிஸார் மே மாதத்தில் அவரை கைது செய்துள்ளனர். அவரது கணணியையும், கையடக்க தொலைபேசியையும் கைப்பற்றியுள்ளார். அமான் தனது குடும்பத்தவர்கள்,நண்பர்கள், காதலியுடன் தனது தீவிரவாத கொள்கைகள் தொடர்பாக கருத்துப்பரிமாற்றத்தில் ஈடுபட்டார், கத்தியை பயன்படுத்தி தனது தாக்குதலை மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.