5 லட்சம் பேர் பிருத்தானியாவில் வாழ்வதற்கான தகைமையை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்!
பிரித்தானியாவில் வாழுகின்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 5 லட்சம் பேர் பிரித்தானியாவில் வாழ்வதற்கான உரிமையை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த சுமார் 5 லட்சம் பேர் பிருத்தானியாவில் வாழ்வதற்கான தகைமையை பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறக்சிற்றிற்குப் பின்னர் பிரித்தானியாவில் வாழும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய மக்கள் பிரித்தானியாவிலேயே வாழ விரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை சேர்ந்த 30 லட்சம் பேரும் அவர்களது குடும்பத்தவர்களும் பிரித்தானியாவில் தொடர்ந்தும் வாழ்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக அரச புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. பிரக்சிற்றிற்கு அப்பால், பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் மக்கள் பிரித்தானியாவிற்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என பிரித்தானிய உட்துறை அமைச்சர் பிரிட்டி பற்றல் வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.